close
Choose your channels

அது கங்கை அல்ல, நைஜீரியா நதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்!

Sunday, May 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்கள் மூலம் சர்ச்சையை கிளப்பி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கங்கையில் பிணங்கள் மிதந்து கொண்டிருக்கும் செய்தி குறித்து அவர் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழப்பவர்களை கங்கை நதியில் அவர்களது உறவினர்களே தூக்கி வீசி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து வீசப்படும் இந்த பிணங்கள் பீகார் வரை சென்றுள்ளதாகவும் இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் இந்த தகவல் குறித்து கருத்து கூறிய நடிகை கங்கனா ரனாவத் ’கங்கை நதியில் பிணங்கள் மிதப்பதாக வெளிவந்திருக்கும் புகைப்படங்கள் போலியானது என்றும் அது உண்மையில் நைஜீரிய நாட்டின் நதிகளில் மிதக்கும் பிணங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கங்கனாவின் இந்த கருத்தை பலர் கடுமையாக கண்டித்து வருவதோடு டுவிட்டரை அடுத்து உங்களை இன்ஸ்டாகிராமும் முடக்கப்போகிறது என்று கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். தற்போது கங்கனா ரனாவத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.