ஜெயம் ரவியின் 'போகன்' முதல்நாள் சென்னை வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Friday,February 03 2017]

'தனி ஒருவன்' வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஜெயம் ரவி-அரவிந்தசாமி கூட்டணி இணைந்து நடித்த படமான 'போகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தின் முதல் காட்சி முடிந்தவுடன் பரவிய பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக அடுத்தடுத்த காட்சிகளுக்கு ரசிகர்களின் கூட்டம் அமோகமாக இருந்தது.
'ரோமியோ ஜூலியட்' இயக்குனர் லட்சுமணனின் வித்தியாசமான திரைக்கதையால் இந்த படத்திற்கு ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் சென்னை வசூல் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.
சென்னையில் முதல் நாளில் 'போகன்' திரைப்படம் ரூ.44 லட்சம் வசூல் செய்துள்ளது. ஜெயம் ரவியின் படங்களில் அதிகபட்சமாக சென்னையில் ஓப்பனிங் வசூல் செய்த முதல் படம் 'போகன்' என்ற பெருமையை பெறுகிறது.
நேற்று வியாழக்கிழமை வேலை நாளாக இருந்தபோதிலும் சென்னையில் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் 85% பார்வையாளர்கள் நிறைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாசிட்டிவ் ரிசல்ட் மற்றும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிம்பு..

சகலகலா வித்தகர் டி.ராஜேந்தரின் மகனும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமுமான சிம்பு இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்

மீண்டும் ஒருமுறை கடற்கரையில் கூடிய இளைஞர்கள் கூட்டம்

சென்னை மெரீனா கடற்கரையில் கூடிய இளைஞர்களின் கூட்டம் தமிழினத்தின் அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டை பீட்டா என்ற கொடிய அமைப்பிடம் இருந்து மீட்டு தந்தது. இந்நிலையில் இந்த போராட்டத்தின் வெற்றி காரணமாக இனி எந்த பிரச்சனைக்கும் மாணவர்கள் முன்வருவார்கள் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் தோன்றியது...

படித்து கொண்டே விபச்சாரம் செய்த கல்லூரி மாணவி படுகொலை

உகாண்டா நாட்டை சேர்ந்த இளம்பெண் பெங்களூரில் படித்து கொண்டே விபச்சாரம் செய்த நிலையில் பேரம் படியாததால் வாடிக்கையாளர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார்...

விஷால் சஸ்பெண்ட் விவகாரம்: தயாரிப்பாளர் சங்கத்திற்கு நாளை வரை கெடு

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், சங்கத்தின் நிர்வாகத்தை சிறப்பான முறையில் செய்து கொண்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திலும் பல சீர்திருத்தங்கள் செய்ய விரும்பினார். ஆனால் அவர் கொடுத்த பேட்டி ஒன்றை அடிப்படையாக வைத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்...

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு. மாறன் சகோதரர்களுக்கு அளிக்கப்பட்ட அதிரடி தீர்ப்பு

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் மீது இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது...