கடலூர் ரசாயன ஆலையில் திடீர் விபத்து? 3 தொழிலாளர்கள் உயிரிழந்த அவலம்!

  • IndiaGlitz, [Thursday,May 13 2021]

கடலூர் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை பாய்லர் வெடித்து விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இன்று அதிகாலை 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிசெய்து கொண்டு இருந்தபோது அங்கிருந்த பாய்லர் திடீரென வெடித்து விட்டதாகவும் இதனால் 3 தொழிலாளர்கள் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

கடலூர் சிப்காட் பகுதியில் தனியார் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் எப்போதும் போல தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக அங்கிருந்த பாய்லர் வெடித்து சிதறத் தொடங்கி இருக்கிறது. இதனால் கொதிக்கும் ரசாயனம் 20 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது பட்டு அவர்கள் சுருண்டு விழத் தொடங்கியதாகவும் இதைப் பார்த்த மற்றவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயலும்போது அவர்கள் மீதும் ரசாயனம் தெளித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 3 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர் என்று தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விபத்தைப் பார்த்து பதறிப்போன தொழிலாளர்கள் பலரும் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறி கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.

More News

செவிலியர்கள் காலில் விழுந்த மருத்துவமனை டீன்....!  எதற்கு  தெரியுமா..?

கோவையில் இஎஸ்ஐ மருத்துவமனையின் டீன் ஆன ரவீந்திரன் என்பவர், செவிலியர்கள் காலில் விழுந்து அழுத சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரணத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோய்...! மருத்துவர் கூறுவது என்ன...?

கருப்பு பூஞ்சை நோயானது, மூக்கிலிருந்து கண்களுக்கும், பின் மூளைக்கும் பரவி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

செவிலியர் தினத்திற்காக ஒரு 'எஞ்ஜாய் எஞ்ஜாமி' பாடல்: இணையத்தில் வைரல்

இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் செவிலியர்களின் சேவை குறித்து பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

மத்திய அரசு செய்யாது, ஸ்டாலின் நீங்களாவது செய்யுங்கள்: கமல்ஹாசன் வேண்டுகோள்

தேர்தல்‌ அறிவிக்கப்பட்ட நாள்‌ முதல்‌ பெட்ரோல்‌, டீசல்‌ விலையில்‌ எந்த மாற்றமும்‌ இல்லாமல்‌ இருந்தது. கடந்த 66 நாட்களாக உயராமல்‌ இருந்த விலை தேர்தல்‌ முடிந்ததும்‌ தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு நிதி: சூர்யா-கார்த்தி வழங்கிய மிகப்பெரிய தொகை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது