close
Choose your channels

23 ஆயிரம் சினிமா தொழிலாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ.3000 டெபாசிட் செய்த பிரபல நடிகர்

Thursday, April 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் நிலையில் சினிமா தொழிலாளிகளின் பசியைப் போக்குவதற்காக தமிழ் திரையுலகை சேர்ந்த உச்ச நட்சத்திரங்கள் பலர் லட்சக்கணக்கில் நிதி உதவியை செய்து வருகின்றனர் என்பதும், ஒரு சிலர் நூற்றுக்கணக்கான மூடை அரிசிகள் கொடுத்து உதவி வருகின்றனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கோலிவுட்டை போலவே பாலிவுட்டிலும் சுமார் 23 ஆயிரம் தினக்கூலி தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் மிகுந்த கஷ்டப்பட்ட கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதனை அடுத்து பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் அவர்கள் இந்திய சினிமா ஊழியர் சம்மேளனத்தின் தலைவரிடம் தினக் கூலி தொழிலாளர்களின் பட்டியலையும் அவர்களுடைய வங்கிக் கணக்கையும் வாங்கி, ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ரூபாய் 3000 முதல் கட்டமாக அவர்களுடை வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளார்.

இது முதல் தவணைதான் என்றும் இதே போல் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தால் மீண்டும் பண உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் சல்மான்கான் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்திய சினிமா ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் திவாரி அவர்கள் சல்மான்கானுக்கு நன்றி கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.