பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் நேற்று மாலை திடீரென சுவாசக்கோளாறு மற்றும் நெஞ்சுவலி காரணமாக அவதிப்பட்டதாகவும், இதனையடுத்து உடனடியாக அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் சஞ்சய்தத் அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சஞ்சய்தத் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது சஞ்சய்தத் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடிகர் சஞ்சய்தத் தற்போது ‘கே.ஜி.எஃப் 2’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

என்னய்யா நடக்குது 2020ல்ல: தமிழ்நாடு வெதர்மேன் ஆச்சரியம்

ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை பொழியும்போது வறட்சியான பகுதியாக கருதப்படும் தமிழக பகுதி ஒன்று மழையில் 100ஆண்டு சாதனையை முறியடித்துள்ளதாக

கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து: அதிர்ச்சித் தகவல் 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் நட்சத்திர ஓட்டல் உள்பட ஒரு சில ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு வரும் நிலையில் அவ்வாறு கொரோனா நோயாளிகள்

தமிழ் திரையுலகில் விரைவில் இடியுடன் கூடிய மழை: சிம்பு குறித்து பார்த்திபன் 

தமிழ் திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக சிம்பு மற்றும் பார்த்திபன் நடித்து வந்த போதிலும் இருவரும் இன்னும் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரையும் பொருட்படுத்தாது தண்ணீரில் தத்தளித்த இளைஞர்களை காப்பாற்றிய 3 பெண்கள்: குவியும் பாராட்டுக்கள்

உயிர் மற்றும் மானத்தை பொருட்படுத்தாது தண்ணீரில் தத்தளித்த வாலிபர்களை மூன்று பெண்கள் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கேரள ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்த முன்னணி தமிழ் ஹீரோ!

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் கேரள ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் வரும் காலங்களில் கதையை தேர்வு செய்வேன் என்று கேரள ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்