close
Choose your channels

கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகையை ஓட்டலில் கட்டி வைத்த மர்ம நபர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

Tuesday, March 25, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் நடிகை ஒருவர் ஹைதராபாத்தில் கடை திறப்பு விழாவுக்கு வந்திருந்த போது, அவர் தங்கியிருந்த ஓட்டலில் மர்ம நபர்கள் புகுந்து தாக்கி, கட்டிப் போட்டுவிட்டு, அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள முன்னணி ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்த பாலிவுட் நடிகை, மறுநாள் கடை திறப்பு விழாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், அவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு வாலிபர்கள் அத்துமீறி அவருடைய அறையில் நுழைந்து, தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், அவர்கள் நடிகையின் இரண்டு கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டுவிட்டு, அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகள் இருந்த கைப்பையை பறித்துக் கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய கைப்பையில் சுமார் 50,000 ரூபாய் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகைக்கு நேர்ந்த இந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment