இதெல்லாம் ஒன்றுமே இல்லை, சாதாரண காய்ச்சல் தான்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட கங்கனா ரனாவத்

இந்தியா உள்பட உலகமெங்கும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் திரையுலக பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவர் தன்னைத்தானே தயார்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த சில நாட்களாக எனக்கு கண் எரிச்சல் இருந்தது, சோர்வாகவும் பலவீனமாகவும் இருப்பதாக உணர்ந்தேன். இமாச்சல பிரதேசம் செல்வதற்காக முடிவெடுத்த நிலையில் நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதில் எனக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதனை அடுத்து நான் என்னை நானே தனிமை படுத்திக்கொண்டேன்.

இந்த வைரஸ் எனது உடலில் புகுந்து பார்ட்டி வைத்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதிலிருந்து நான் கண்டிப்பாக மீண்டு வருவேன் என்பது எனக்கு தெரியும். மக்களே, தயவுசெய்து கொரோனா வைரஸ்க்காக பிரத்யேகமாக எந்த சக்தியையும் கொடுக்க வேண்டாம். நீங்கள் பயந்தால் அது உங்களை மேலும் பயமுறுத்தும்., இந்த கொரோனாவை நாம் எல்லோரும் சேர்ந்து அழிப்போம். இது ஒரு சாதாரண ப்ளூ காய்ச்சல் போன்றது தானே தவிர வேறொன்றுமில்லை’ என்று கூறியுள்ளார். கங்கனா ரணாவத்தின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.