close
Choose your channels

மார்பகம் இருப்பதே அதற்குத்தானே: பிரபல நடிகையின் தைரியமான பதிவு!

Wednesday, January 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மார்பகங்கள் பெண்களுக்கு இருப்பது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு தானே என்றும், அதை சொல்வதற்கு எதற்காக வெட்கப்பட வேண்டும் என பிரபல நடிகை ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் வெளியான பிரபாஸின் ‘சாஹோ’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை எல்வின் ஷர்மா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் தனது இரண்டு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும்பாலானோர் வாழ்த்து தெரிவித்திருந்தாலும் ஒரு சிலர் ட்ரோல் செய்த நிலையில் அதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில், ‘ஒரு புதிய அம்மாவாக வாழ்க்கை தொடங்கும்போது மனரீதியாக சோர்வாக இருக்கும், ஆனால் அம்மாக்கள் தாங்கள் தனியாக இல்லை என்று தெரிவிக்க என் கதையை பகிர்ந்து கொண்டேன். தாய்ப்பால் கொடுப்பது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் எனக்கு வலிமை கிடைக்கிறது. நான் அதை அழகாக பார்க்கிறேன்.

தாய்ப்பால் என்பது மிகவும் இயற்கையான மற்றும் ஆரோக்கியமான விஷயங்களில் ஒன்று. உண்மையில் பெண்களுக்கு மார்பகங்கள் இருப்பது தாய்ப்பால் கொடுப்பதற்கு தான், அதை கூறுவதற்கு கூறுவதற்கும் புகைப்படங்களை பதிவு செய்வதற்கும் ஏன் வெட்கப்பட வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். நடிகையின் இந்த தைரியமான பதிவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.