close
Choose your channels

சம்பளம் இன்றி நர்ஸாக பணிபுரியும் பிரபல நடிகை

Monday, March 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் திரையுலகின் காஸ்டியூம் டிசைனராக இருந்து அதன்பின் நடிகையாக மாறியவர் ஷிகா மல்ஹோத்ரா. ’அன்சீன்’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் பல படங்களில் நடித்த ஷிகா, சமீபத்தில் வெளியான ‘காஞ்சி லைஃப் இன் எ சிலாஹ்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் ஷிகா மல்ஹோத்ரா நர்சிங் படித்தவர் என்பதும் காஸ்ட்யூம் டிசைனராகவும் நடிகையாகவும் மாறுவதற்கு முன் அவர் நர்சாக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் படப்பிடிப்புகள் முற்றிலுமாக தடைபட்டுள்ளதால் மீண்டும் நர்சாக அவர் களமிறங்கியுள்ளார்.

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து கொண்டிருக்கும் அவர் தனது நர்ஸ் பணிக்காக சம்பளம் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசமான தருணத்தில் மக்களுக்கு தனது நர்ஸ் பணியை ஆற்ற வந்திருப்பதாகவும் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்றும் தனது சமூக வலைதளம் மூலம் கூறியுள்ளார்.

ஊரடங்கு நேரத்தில் அனைத்து நடிகர் நடிகைகளும் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தனது பழைய நர்ஸ் பணியை மீண்டும் கையில் எடுத்துள்ள நடிகை ஷிகாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos