நிர்வாண போஸ் கொடுத்து பெண்களுக்கு நல்லது செய்திருக்கிறார்: ரன்வீர் குறித்து பிரபல நடிகை

பிரபல பாலிவுட் நடிகரும் நடிகை தீபிகா படுகோனின் கணவருமான ரன்வீர் சிங் சமீபத்தில் நிர்வாண புகைப்படம் வெளியிட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அவர் மீது ஒரு சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த பலர் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் என்பதும் அவரது நிர்வாண போஸில் எந்தவிதமான ஆபாசம் இல்லை என்றும் கூறிவருகின்றனர்.

ஏற்கனவே ரன்வீர்சிங்கிற்கு ஆதரவாக வித்யாபாலன், ஆலியா பட் போன்ற பிரபல நடிகைகள் குரல் கொடுத்த நிலையில் அவருக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நிர்வாணமாக போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் சமீபத்தில் தான் துபாயிலிருந்து நாடு திரும்பியதாகவும் இங்கு எங்கு பார்த்தாலும் ரன்வீர்சிங்கின் நிர்வாண போஸ் குறித்து செய்தி வெளியாகி கொண்டிருப்பதாகவும், என்னை கேட்டால், அவர் நிர்வாண போஸ் கொடுத்து நமது நாட்டு பெண்களுக்கு நல்லது செய்து இருக்கிறார் என்றும் அவர் தொடர்ந்து நிர்வாண போட்டோஷூட் நடத்த வேண்டும் என்றும் அவரை அப்படி பார்க்கத்தான் நான் ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

பேரறிவாளனுடன் செம டான்ஸ் ஆடிய பிரபல நடிகர்: வைரல் வீடியோ

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்த பேரறிவாளன் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.

படப்பிடிப்பில் காயம்  ஏற்பட்டது எப்படி? அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட சம்யுக்தா ஹெக்டே!

நடிகை சம்யுக்தா ஹெக்டே சமீபத்தில் படப்பிடிப்பில் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென காயம் ஏற்பட்டது என்பதும் அதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ப்ரணிதா: இணையத்தில் வைரல்!

சூர்யா மற்றும் கார்த்தியுடன் நடித்த நடிகை ப்ரணிதா சமீபத்தில் குழந்தை பெற்ற நிலையில் முதல் முறையாக அந்த குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

நான் போட்ட தப்புக்கணக்கு: முதல்முறையாக மனம் விட்டு பேசிய நாக சைதன்யா!

சமந்தாவின் முன்னாள் கணவரும் பிரபல தெலுங்கு நடிகருமான நாகசைதன்யா ஒரு விஷயத்தில் நான் தப்புக்கணக்கு போட்டு விட்டேன் என்று பேட்டி அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீர்ச்சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும்: 'பொன்னியின் செல்வன்' பொன்னி நதி பாடல்

பிரம்மாண்ட இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது