பிரபல இசையமைப்பாளர் கொரோனாவுக்கு பலி: ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்

பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து ஏஆர் ரகுமான் உள்பட பல திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பாலிவுட்டில் நதிம்-ஷர்வன் என்ற இரட்டையர்கள் பல ஆண்டுகாலமாக திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தனர். கடந்த 1990 முதல் 2000 வரை பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த இவர்கள், கடந்த 2005 ஆம் ஆண்டு பிரிந்து தனித்தனியே இசையமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த இரட்டையர்களில் ஷர்வன் என்பவருக்கும் சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் உள்பட பலர் அவரது மறைவிற்கு தங்களது சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் அவர்களும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா நடராஜன்: ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் கிங் நடராஜன், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

மாலத்தீவு போட்டோ....! பிரபலங்களை எச்சரித்த ஸ்ருதி ஹாசன்...!

திரையுலக பிரபலங்கள் மாலத்தீவு செல்வது குறித்து கருத்து பதிவிட்ட நடிகை ஸ்ருதிஹாசனுக்கு, நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

தடுப்பூசிக்கு ஒரே விலையில்லையா...? மத்திய அரசை  சரமாரியாக கேள்வி கேட்கும் மம்தா, சோனியா....!

தடுப்பூசிக்கு வெவ்வேறு விலை நிர்ணயித்துள்ளதால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் மத்திய அரசை பார்த்து சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர்.

அலட்சியத்தால் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்த கொரோனா நோயாளி… பகீர் சம்பவம்!

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்து உள்ளார்

உறவினர்களே அவமிதிப்பு… கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த முஸ்லீம் இளைஞர்கள்!

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் அதுவும் இந்து முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்த காட்சி பார்ப்போரை கண்கலங்கை வைத்துள்ளது.