close
Choose your channels

ஐபிஎல் அணியை ஏலம் எடுக்கும் பிரபல நட்சத்திர தம்பதி?

Friday, October 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் தொடர்கள் கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக 2 அணிகள் இணைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணிகளுக்கான ஏலம் அக்டோபர் 26ஆம் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அணிகளை ஏலம் எடுக்க பல முன்னணி நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கால்பந்து நிறுவனமான மேன்செஸ்டர் யுனைடெட் என்ற நிறுவனம் ஒரு அணியை ஏலம் எடுக்க விரும்புவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஐபிஎல் சீசனில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள இரண்டு அணிகளின் ஏலத்தில் பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது, இந்த நட்சத்திர தம்பதிகள் ஐபிஎல் அணியை ஏலம் எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே பாலிவுட் நடிகர் ஷாருக்கான், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ஆகியோர் ஐபிஎல் அணிகளுக்கு உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.