ஐபிஎல் 2021 இல் 9 ஆவது அணி? உரிமையாளர் யார்? பரபரப்பை ஏற்படுத்தும் புது அறிவிப்பு!!!

  • IndiaGlitz, [Friday,November 13 2020]

 

கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் 13 ஆவது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதையடுத்து அடுத்த 14 ஆவது சீசனுக்கு தேவையான வேலைகளை செய்யத் தொடங்கி இருக்கிறது இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்நிலையில் வருமான இழப்பு மற்றும் விளம்பரதாரர்களின் விலகல் போன்றவை 2021 ஐபிஎல் தொடருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என பிசிசிஐ யின் தலைவர் கங்குலி தெரிவித்து இருக்கிறார்.

இதனால் 2021 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் புதிதாக 9 ஆவது அணியை இணைக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகவும் கங்குலி தெரிவித்து இருக்கிறார். இந்த 9 அணி உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானத்தைக் கொண்டிருக்கும் அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு அமையலாம் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது. இதையடுத்து புதிதாக உருவாக்கப்பட இருக்கும் 9 ஆவது ஐபிஎல் அணியை யார் வாங்கப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அணியில் குஜராத்தை மையமாகக் கொண்ட லயன்ஸ் அணி இடம் பெற்று இருந்தது. ஐபிஎல் அணியை 8 ஆகக் குறைக்கும் நடவடிக்கையின்போது அந்த லயன்ஸ் அணி விலகிக் கொண்டது. அதேபோல முன்பு கேரளாவை மையமாகக் கொண்டு கொச்சி டஸ்கர்ஸ் அணியும் செயல்பட்டு வந்தது. ஆனால் விளம்பரதாரர்களிடையே ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த அணியும் விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புதிதாக 9 ஆவது அணி உருவாக்கப்பட இருக்கிறது.

இந்த அணியை வாங்குவதற்கு பாலிவுட் பிரபலம் சல்மான்கான் மற்றும் மலையாள நடிகர் மோகன்லால் போன்றோர் விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே நடிகை ப்ரீத்தி ஜிந்தா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். கொல்கத்தா அணியை நடிகர் ஷாருக் மற்றும் நடிகை ஜுஹி சாவ்லா இணைந்து நடத்தி வருகின்றனர். இதேபோல் தற்போது புதிதாக உருவாக இருக்கும் 9 ஆவது ஐபிஎல் அணியை சல்மான் மற்றும் மேகன்லால் இருவரும் இணைந்து நடத்துவார்கள் எனவும் கருத்துக் கூறப்படுகிறது.

ஆனால் புதிதாக அமைய இருக்கும் 9 ஆவது அணிக்கு யார் சொந்தக்காரர் என்பது குறித்த முடிவு பிசிசிஐ நடத்த இருக்கும் ஏலத்தைப் பொறுத்தே முடிவு செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 9 அணிக்கான ஏலத்தை வருகிற பிப்ரவரி மாதத்தில் நடத்த இருப்பதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

More News

கணினி புரோகிராமில்… கின்னஸ் சாதனை படைத்த 2 ஆம் வகுப்பு இந்திய மாணவன்!!!

கம்பியூட்டர் புரோகிராமைப் பார்த்து பெரியவர்களே மண்டையைப் பிய்த்துக் கொள்ளும்போது நம்ம ஊரு 6 வயது சிறுவன் அதில் கின்னஸ் சாதனை புரிந்து இருக்கிறான்.

தேர்தல் களத்துக்கு தயாராகி வரும் அஇஅதிமுக… விறுவிறுப்பான பணிகளால் உற்சாகம்!!!

தமிழகத்தில் அடுத்த மே மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

என்னுடைய சூப்பர் ஹீரோ உங்கள் தந்தை தான்: நடிகைக்கு நன்றி கூறிய சூர்யா!

சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் உள்பட நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியாகியுள்ள

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் இன்னொரு படமும் ரெடி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் என்பதும், அதில் ஒரு சில படங்களின் ஒட்டுமொத்த பணிகளும் முடிவுக்கு

ஜீஸஸ் என் ஃப்ரெண்டு தான், எண்ணெயில போட்டு பொரிச்சிடுவேன்: மூக்குத்தி அம்மன் ஸ்னீக்பீக்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் நாளை தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது