பிரபல நடிகை-அரசியல்வாதி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்

  • IndiaGlitz, [Saturday,May 06 2017]

பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த மர்ம போன் கால் ஒன்றால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை குஷ்பு தனது குடும்பத்தினர்களுடன் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தேனாம்பேட்டை பிரிவு 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு மர்ம போன்கால் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், 'நடிகை குஷ்புவின் பட்டினப்பாக்கம் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டியுள்ளார். இதனால் உடனடியாக உஷாரான போலிசார் நள்ளிரவு குஷ்புவின் பட்டினப்பாக்கம் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். பின்னர் நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.

இதனையடுத்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குஷ்பு தற்போது குடும்பத்தினர்களுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூப்பர் ஹிட் தெலுங்கு பட ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷ்

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறையிலும் முன்னேறி வரும் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே அரை டஜன் படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன '100% லவ்' என்ற படத்தின் தமிழ் ரிமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்...

'பள்ளிப்பருவத்திலேயே: பிரபல இசையமைப்பாளரின் மகன் ஹீரோவாகும் படம்

கடந்த 90ஆம் ஆண்டுகளில் உள்ள அள்ளித்தந்த பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் சிற்பி. இவரது இசையில் உருவான நாட்டாமை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்கொடி, உன்னை நினைத்து போன்ற பல படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றன.

'விவேகம்' டீசர் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்!

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மே 18 என்றும், டீசரின் ரன்னிங் டைம் 64 வினாடிகள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியில் கமல்ஹாசன்

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் தலைமை எடிட்டராக இருந்த அர்னாப் கோஸ்வாமி, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு புதியதாக 'ரிபப்ளிக் டிவி' என்ற தொலைக்காட்சியை ஆரம்பிக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை. உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

தலைநகர் டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 கொடூர நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் டெல்லி மற்றும் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற அவர் சில நாட்களில் பரிதாபமாக மரணம் அடைந்தார்...