close
Choose your channels

அஜித்துடன் 3வது படம் உண்மையா? போனிகபூர் விளக்கம்

Thursday, July 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து முடித்துள்ள 'நேர் கொண்ட பார்வை' மற்றும் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கவுள்ள மற்றொரு ஆக்சன் படம் இரண்டு படங்களையும் போனிகபூர் தயாரிக்கின்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அஜித் நடிக்கும் இன்னொரு படத்தையும் போனிகபூர் தயாரிக்கவிருப்பதாகவும், மூன்று படங்களுக்கும் சேர்த்து போனிகபூர், அஜித்துக்கு ரூ.100 கோடி சம்பளம் தர ஒப்புக்கொண்டிருப்பதாகவும் நேற்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் இந்த செய்தியை போனிகபூர் மறுத்துள்ளார். அஜித் நடிக்கும் மூன்று படங்களை நான் தயாரிக்கவிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளில் உண்மை இல்லை. 'நேர் கொண்ட பார்வை' படத்திற்கு பின் அஜித்தின் அடுத்த ஆக்சன் படத்தை மட்டுமே நான் தயாரிக்கின்றேன். அஜித் என்னுடைய தயாரிப்பில் ஒரு இந்தி படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என விரும்பினேனே தவிர, இந்த படம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தனது சமூக வலைத்தளத்தில் போனிகபூர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக பரவி வந்த வதந்திக்கு போனிகபூர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருப்பினும் போனிகபூரின் இன்னொரு படத்திலும் அஜித் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.