அஜித்தின் 'வலிமை' ஓடிடியில் ரிலீஸா? போனிகபூர் விளக்கம்   

  • IndiaGlitz, [Thursday,June 25 2020]

தல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி கூட இல்லை என்ற நிலை ஏற்பட்ட பின்னரே ‘வலிமை’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்பதில் அஜித் உறுதியாக உள்ளார் என்றும், தனது படக்குழுவினர் யாருக்கும் ‘வலிமை’ படத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதே அவருடைய இந்த முடிவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் ரிலீசுக்கு தயாரானால் அந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்றும், அதுமட்டுமின்றி போனிகபூர் தயாரிக்கும் மூன்று திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆகப் போவதாகவும் ஒரு சில இணையதளங்களில் செய்திகள் கசிந்துள்ளது

இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் போனிகபூர் தான் தயாரித்து வரும் ’வலிமை’, ‘மைதான்’ மற்றும் ’வக்கீல் சாஹிப்’ ஆகிய மூன்று திரைப்படங்களும் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பில்லை என்று உறுதிபடக் கூறியுள்ளார். தன்னுடைய 40 ஆண்டுகால தயாரிப்பு அனுபவத்தில் தான் இதேபோல் பல பிரச்சினைகளை சந்திக்க உள்ளதாகவும் ஆனால் திரையரங்குகளில் ரிலீஸ் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்

அதே நேரத்தில் ஓடிடியில் ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர்களுக்கு தான் ஆதரவு அளிப்பதாகவும் இந்த நேரத்தில் அவர்களுக்கு வேறு வழி இல்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய ’வலிமை’, ‘மைதான்’ மற்றும் வக்கீல் சாஹேப்’ ஆகிய மூன்று திரைப்படங்களும் முதலில் திரை அரங்குகளில் தான் வெளியாகும் என்றும் அதன் பின்னரே மற்ற பிளாட்பாரங்களில் ரிலீஸாகும் என்றும் போனிகபூர் உறுதியாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அதிரடி அறிவிப்பு

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ்

பெற்ற குழந்தைகளை இதற்கா பயன்படுத்துவது? சபரிமலை பெண் போராளி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று போராடிய பெண் போராளி ஒருவர் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து தனது குழந்தைகளையே தனது உடம்பில் பெயிண்டிங் வரைய செய்ததற்காக போலீசார்

3000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு: தமிழக கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் இரண்டாயிரத்தை தாண்டியது என்பதும் குறிப்பாக நேற்று கடந்த சில நாட்களாக 2500க்கும் மேற்பட்டவர்கள்

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் கும்கி நடிகர்: திரையுலகினர் வாழ்த்து 

இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கிய 'பாஸ் என்ற பாஸ்கரன்' என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான தயாரிப்பாளர் சுவாமிநாதனின் மகன் அஸ்வின்

வாயில் ஊறும் எச்சிலை வைத்து கொரோனா பரிசோதனை!!! புது முயற்சியில் இறங்கிய விஞ்ஞானிகள்!!!

கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கும் பணி இதுவரை கடினமாகவே இருந்து வருகிறது.