'வலிமை' ரிலீஸ் தேதி குறித்து சற்றுமுன் போனிகபூர் பதிவு செய்த டுவிட்!

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் வெளியான ட்ரெய்லரில் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் அதன் பின்னரும் படக்குழுவினர் ஜனவரி 13 என்ற தேதியை உறுதி செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை அடுத்து எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. மேலும் ’ராதே ஷ்யாம்’ ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் ’வலிமை’ திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழுந்தது. மேலும் ஜனவரி 10ஆம் தேதிக்கு பின்னர் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற சூழ்நிலையும் உள்ளது

இந்த நிலையில் சற்று முன் ’வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஜனவரி 13-ஆம் தேதி திட்டமிட்டபடி ’வலிமை’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என உறுதிபடக் கூறியுள்ளார். இதனால் அஜீத் ரசிகர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் இந்த படம் வெளிவரும் என்று கூறி வருகின்றனர்.

More News

பிக்பாஸ் வீட்டிற்கு பணப்பெட்டியுடன் வந்த சரத்குமார்: வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் பிக்பாஸ் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொண்டு போட்டியிலிருந்து விலக விரும்புபவர்கள் வெளியேறலாம் என்று அறிவிப்பார்

'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு இணையான ஐட்டம் பாடல்: ஆடிய தமிழ் நடிகை யார் தெரியுமா?

சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் இடம் பெற்ற 'ஊ சொல்றியா மாமா' என்ற ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா டான்ஸ் ஆடி இருந்தார்

நீண்ட இடைவெளிக்கு பின்... டைட்டில் வின்னரை சந்தித்த நடிகர் ஜெய்!

நீண்ட இடைவேளைக்கு பின்னர் தன்னுடன் நடித்த நடிகையை சந்தித்துள்ளதாக புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை நடிகர் ஜெய் செய்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது

வருணுக்கு வாழ்த்து கூறிய பிக்பாஸ் டைட்டில் வின்னர்: வைரல் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய வருண்,  பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியை சந்தித்து வாழ்த்து பெற்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவான்மியூர் டிக்கெட் கவுண்டர் கொள்ளை சம்பவம்… திடீர் திருப்பத்தால் அதிர்ச்சி!

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நேற்று ஊழியர் ஒருவரை துப்பாக்கிமுனையில் மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு அங்கிருந்த