close
Choose your channels

ஏர்லாக், போர்வெல் மிஷின்: இதை ஏன் முதலில் செய்யவில்லை?

Monday, October 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் இரண்டு வயது சுர்ஜித் என்ற சிறுவன் வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் அந்த சிறுவனை ஆழ்துளையில் இருந்து மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர்

இந்த நிலையில் சிறுவனை மீட்க பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டபோதிலும் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து, தற்போது கடைசியாக போர் மெஷின் மூலம் துளை போடப்பட்டு வருகிறது

ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட ரிக் என்ற இயந்திரம் கொண்டு முதலில் துளை போட்ட போது அந்த மெஷின் பழுதடைந்ததால் தற்போது கம்ப்ரசர் மூலம் இயங்கும் போர்வெல் மிஷின் மூலம் ட்ரில் போடப்படுகிறது. இந்த போர்வெல் மிஷின் ஒரு மணி நேரத்தில் 100 அடி வரை தோண்ட முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த போர்வெல் மிஷினை ஏன் முதலிலேயே பயன்படுத்தப்படவில்லை என சமூக வலைதள பயனாளர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த போர்வெல் மிஷின் மூலம் மூன்று இடங்களில் துளை போட்டு, அந்த மூன்றையும் இணைக்கக்கூடிய அளவிற்கு ரிக் எந்திரத்தை பயன்படுத்தி இருந்தால் இந்நேரம் சுர்ஜித்தை காப்பாற்றி இருக்கலாம் என்று அவர்கள் கருத்து கூறி வருகின்றனர்

அதேபோல் குழந்தை 26 இருக்கும்போதே ஏர்லாக் செய்து அந்த இடத்திலேயே குழந்தையை நிற்பாட்டாமல் 85 அடிக்கு கீழ் போன பின்னர் ஏர்லாக் செய்தது ஏன்? என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இருப்பினும் கேள்வி கேட்பது ரொம்ப சுலபம். நடைமுறைப்படுத்துவதன் சிக்கல் மீட்புப்பணியினர்களுக்கு மட்டுமே தெரியும். தற்போது முழு ஈடுபாட்டுடன் மீட்புப் பணிகளில் இருக்கும் போராட்டக்காரர்களை கேள்விமேல் கேள்வி கேட்பதால் மட்டும் பிரச்சனை தீர்ந்து விடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.