close
Choose your channels

கள்ளக்காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது!

Thursday, February 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கள்ளக்காதலியை சந்திப்பதற்காக மாங்காய் குடோனில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அய்யம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயது கூலி தொழிலாளி ராஜாங்கம். இவருக்கும் கணவனை இழந்து இரண்டு குழந்தைகளுடன் உள்ள ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நள்ளிரவில் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சம்பவத்தன்று தனது கள்ளக்காதலியை சந்திக்க ராஜாங்கம் அவரது வீட்டருகே வந்துள்ளார். ஆனால் அவருடைய வீடு பூட்டி இருந்ததால் அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் அவர் வெளியே வரும்வரை காத்திருந்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வெளியே வராததால்அந்த பெண்ணை வெளியே வரவழைக்க ராஜாங்கம் பெட்ரோல் குண்டு ஒன்றை அவரது வீட்டின் அருகே வீச முடிவு செய்தார். 

இதனையடுத்து அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி பெட்ரோல் குண்டு தயார் செய்து அருகிலுள்ள மாங்காய் குடோன் மீது பெட்ரோல் குண்டை வீசினார். அவ்வாறு பெட்ரோல் குண்டு வீசினால் அந்த பெண் வெளியே வருவார் என்று ராஜாங்கம் எதிர்பார்த்த நிலையில் அவர் வீசிய் பெட்ரோ குண்டால் மாங்காய் குடோன் தீப்பற்றி மிகப்பெரிய விபத்தாகியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாங்கம் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெட்ரோல் பங்கில் இந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது ராஜாங்கம் தான் வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி சென்றது தெரியவந்தது இதனையடுத்து அவரை பிடித்து விசாரணை செய்தபோது கள்ளக்காதலியை சந்திக்கவே தான் பெட்ரோல் குண்டு வீசியதாக ஒப்புக்கொண்டார் இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.