தந்தைக்கு தெரியாமல் ஆன்லைன் கேம் விளையாடிய சிறுவன்: வங்கியில் இருந்து ரூ.90 ஆயிரம் திடீர் மாயம்!

  • IndiaGlitz, [Saturday,September 19 2020]

ஆன்லைன் கேம் விளையாடி ரூ.90,000 இழந்த சிறுவன் ஒருவனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ஹிருத்திக் ரோஷன் என்ற சிறுவன் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவனுக்கு அவரது தந்தை செல்போன் வாங்கி கொடுத்ததை அடுத்து அந்த செல்போனில் ஆன்லைன் வீடியோகேம் சிறுவன் விளையாடி வந்துள்ளதாக தெரிகிறது

இந்த நிலையில் ஹிருத்திக் தந்தை அளித்த செக் ஒன்று பணம் இல்லாமல் திரும்பி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது வங்கி கணக்கில் உள்ள பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் சுமார் 90,000 ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது தெரிந்தது

உடனே இது குறித்து அவர் தனது மகனிடம் விசாரித்தபோது ஆன்லைனில் பிரிமியர் கேமில் விளையாடும்போது 300 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய் என கொஞ்சம் கொஞ்சமாக மொத்தம் 90 ஆயிரம் செலுத்தியுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளான். மேலும் தந்தையின் செல்போனிலிருந்து ஓடிபி எண்ணையும் அந்த சிறுவன் எடுத்துள்ளது தெரிந்தது.

இதனையடுத்து தனது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் கேம் விளையாடி 90,000 பணத்தையும் மகன் இழந்துள்ளார் என்பதை அறிந்து ஹிருத்திக் தந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். குழந்தைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுப்பது மட்டுமின்றி அந்த செல்போனை அவர்கள் எவ்வாறு உபயோகிக்கிறார்கள் என்பதையும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது

More News

தமன்னாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு! சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்!

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஜொலித்து வரும் நடிகை தமன்னா.

கொரோனா சிகிச்சையில் சிறந்து விளங்கும் தமிழக மருத்துவமனைகள்… விருது பெற்று சாதனை!!!

இந்திய அளவில் அதிக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மாநிலமாகத் தமிழ&

கொள்ளையடித்த தங்கச் செயினை டிவி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்த பாசக்கார திருடன்!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!

கன்னட மொழியில் ஒளிபரப்படும் ஒரு தனியார் டிவி நிறுவனத்திற்கு பார&

வெறுமனே 90 நிமிடத்தில் துல்லியமான கொரோனா ரிசல்ட்… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!!!

இதுவரை கொரோனா பரிசோதனைக்கு RTPCR சோதனை கருவியை மட்டுமே உலக நாடுகள் நம்பியிருக்கின்றன

முந்தானை முடிச்சு' ரீமேக்: ஊர்வசி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்த 'முந்தானை முடிச்சு' திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் 37 ஆண்டுகள் கழித்து