close
Choose your channels

15 அடி ஆளம்...ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது குழந்தை மீட்பு.

Thursday, December 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் உள்ள சிபா கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது பீமாராம் தவறுதலாக ஆழ்துளை கிணற்றில் இன்று காலை விழுந்துள்ள்ளான்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கினர். இன்று காலை மீட்பு பனி தொடங்கும் போது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் 15 அடி ஆழத்தில் சிக்கி இருந்தான். மீட்பு படையினர் பொக்லைன் இயந்திரத்தைக்கொண்டு சிறுவன் சிக்கியிருக்கும் ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் குழிதோண்டினர்.

மருத்துவக்குழு அங்கே வரவழைக்கப்பட்டது. குழந்தையின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர். குழந்தையின் அழுகை சத்தம் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் சிறுவனுக்கு ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீர் தொடர்ந்து கொடுத்து வந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆறுமணி நேரத்திற்கும் அதிகமாக மீட்பு பபணி நடைபெற்று வந்த நிலையில் குழந்தையை உயிரோடு மீட்டிருக்கின்றனர். இப்போது பீமாராமை மருத்துவமனைக்கு கொடு சென்றிருப்பதாக சிரோஹி வட்டாச்சியர் ஓம் குமார் கூறினார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.