காற்று மாசுபாடு ஆண்மையை குறைக்குமா? பகீர் ரிப்போர்ட்!

  • IndiaGlitz, [Thursday,October 28 2021]

மனித மூளைக்கும் அவர்கள் பாலியல் உறுப்புகளுக்கும் இடையே தொடர்பு உண்டு என்பதை மருத்துவ உலகம் ஏற்கனவே நிரூபித்து இருக்கிறது. இந்நிலையில் காற்று மாறுபாட்டால் மனித மூளையில் வீக்கம் ஏற்படுகிறது என்றும் அதைத் தொடர்ந்து விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது என்றும் அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.

மாசுபட்ட காற்றை சுவாசிக்கும்போது சுவாச கோளாறு, இருதய நோய்கள், உடல்பருமன், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும் என்பது நமக்கு தெரிந்ததுதான். ஆனால் முதல்முறையாக காற்று மாசுபாட்டால் ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைந்து போகிறது என மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது காற்று மாசுபாடு குறித்து ஆய்வுசெய்த விஞ்ஞானிகள் மாசுபட்ட காற்றால் மனித மூளையில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு காரணமாக ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது என்பதை விளக்கியுள்ளனர். மேலும் இதுபோன்ற கருத்துகளை சில விஞ்ஞானிகள் ஏற்கனவே வலியுறுத்தி இருந்த நிலையில் அதைத் தற்போது மேரிலேண்ட் விஞ்ஞானிகள் நிரூபித்து காட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் தற்போது மேற்கொண்டிருக்கும் நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் ஆண்கள் ஏற்கனவே பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்நிலையில் காற்று மாசுபாடும் ஆண்களுக்கு சிக்கலை கொண்டுவரும் என்ற தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

கடலுக்கு முன் அழகுசிலை… நடிகை ஆண்ட்ரியாவின் வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பாடகியாகவும் வலம்வருபவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. “ஆயிரத்தில் ஒருவன்“

பிரபல நடிகை தமன்னா மீது வழக்கு… காரணம் இதுதான்…

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர்

இந்திய அணிக்கு அடித்த ஜாக்பாட்… அரை இறுதிக்கு முன்னேறுமா?

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா முதல் போட்டியிலேயே படு மோசமாக தோல்வியைத் தழுவியது.

நான் அடக்கமா இல்லையா? சிபியுடன் மல்லுகட்டும் தாமரை!

பிக்பாஸ் வீட்டில் நகரத்தார் மற்றும் கிராமத்தார் என்ற டாஸ்க் கடந்த 2 நாட்களாக நடந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் விவாத மேடை ஒன்று நடக்க இருப்பதாக பிக்பாஸ் அறிவிக்கின்றார்

ஆர்யன்கானுக்கு ஜாமின் கிடைத்தது எப்படி? மும்பை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் சற்று முன் ஜாமீன் அளித்துள்ள நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.