close
Choose your channels

எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்குமே கொரோனா தடுப்பூசி வேண்டாம்… அதிபரின் சர்ச்சை கருத்து!!!

Saturday, November 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்குமே கொரோனா தடுப்பூசி வேண்டாம்… அதிபரின் சர்ச்சை கருத்து!!!

 

உலகமே கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் எனக் காத்துக் கொண்டிருக்கும்போது ஒருநாட்டின் அதிபர் மட்டும் எனக்கு கொரோனா தடுப்பூசி வேண்டாம் எனக் கூறியதோடு, என் நாட்டிற்கும் அது தேவைப்படாது எனச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்தப் பதிவு தற்போது உலகம் முழுவதும் கடும் வாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ. இவர் கொரோனா தொற்று உருவான காலக்கட்டத்தில் இருந்தே பல சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருகிறார். அதாவது கொரோனா பாதிப்பு என்பது ஒரு சாதாரண காய்ச்சல் போன்றதுதான். இதற்கு பயப்பட தேவையில்லை என்று செய்தியாளர்கள் மத்தியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்து முகமூடி அணிந்தால் கொரோனா வராது எனக் கூறுவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி மக்களிடம் இருக்க வேண்டிய விழிப்புணர்வையும் தட்டி கழித்தார்.

அதோடு விட்டு இருந்தால் பரவாயில்லை, உலக நாடுகள் முழுக்க ஊரடங்கு விதிமுறைகள் அமலில் இருந்து வந்தபோது பிரேசிலில் ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்த மாட்டேன் என அடம்பிடித்து வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரியை பதவியை விட்டும் விலக்கினார். இப்படி அடுக்கடுக்கான சர்ச்சைகளில் ஈடுபட்டு வந்த அவர் பல பொதுக்கூட்டங்களில் மாஸ்க் இல்லாமலே கலந்து கொண்டார். இதன் காரணமாக கடந்த ஜுலை மாதத்தில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

அதையடுத்து அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தனிமைப் படுத்தப்பட்டார். ஆனாலும் தன்னுடைய அணுகுமுறையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்து மேம்போக்கான கருத்துகளையே அவர் கூறி வருகிறார். இதனால் சில அதிகாரிகள் அவருக்கு எதிரான விமர்சனங்களைக் கூறத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் “நான் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளமாட்டேன். அது என் உரிமை. பிரேசிலுக்கும் அது வேண்டாம்” என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் அந்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி மற்றும் சமூக இடைவெளி குறித்த சில செயல் திட்டங்களையும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் பிரேசில் 2 ஆவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் ஒரு நாட்டின் அதிபரே இப்படி தன் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டாம் எனக் கூறுவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை பலரும் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.