close
Choose your channels

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமாப்பிள்ளை கைது: சென்னையில் பரபரப்பு

Tuesday, January 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பட்டாக் கத்தியை வைத்து தங்களுடைய பிறந்த நாள் கேக்கை வெட்டும் ரவுடிகள் கைது செய்யப்படும் செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட ஒரு நடிகர் தனது பிறந்தநாளின் போது பட்டாக்கத்தியால் கேக் வெட்டியதால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை திருவேற்காட்டில் புவனேஷ் என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமண வரவேற்பில் அவரது நண்பர்கள் அவரது கையில் பட்டாக்கத்தியை கொடுத்து கேக் வெட்டும்படி கூறியதை அடுத்து அவர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டினார்

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்ததை அடுத்து இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஆதாரமாக வைத்து புவனேஷை போலீசார் கைது செய்தனர். இவர் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பதும் முன்னாள் ’ரூட் தல’ என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இவருக்கு பட்டாக்கத்தியை கொடுத்து கேக் வெட்ட கூறிய மாணவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.