close
Choose your channels

தாலி கட்டும் நேரத்தில் திடீரென மாயமான மாப்பிள்ளை: மணப்பெண் அதிர்ச்சி!

Friday, November 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தாலிகட்டும் நேரத்தில் திடீரென மாப்பிள்ளை மாயமானதால் மணமகள் உள்பட மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்த சம்பவம் நாகர்கோவில் அருகே நடந்துள்ளது

நாகர்கோவில் அருகே மெக்கானிக் வேலை பார்த்து வந்த ஒருவருக்கும் என்ஜினியர் பெண் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. இந்த நிச்சயதார்த்தத்தில் மணமகன் மணமகள் ஆகிய இருவரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்

இந்த நிலையில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதை அடுத்து திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது., மணமகளின் வீட்டார் இந்த திருமணத்தை நல்லபடியாக எந்தவித குறையும் இன்ரி முடிக்க வேண்டும் என்பதற்காக விருந்தோம்பல் பணியில் ஈடுபட்டு வந்தனர்

இந்த நிலையில் திடீரென திருமணம் நடக்க ஒரு சில மணி நேரம் இருந்த போது திடீரென மாப்பிள்ளை மாயமாய் மறைந்து விட்டதாக வெளிவந்த தகவல் மணமகள் வீட்டார்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனை அடுத்து என்ன செய்வதென்று மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் திக்கு முக்காடினர்.

இந்த நிலையில் மணமகன் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அந்த பெண்ணை திருமணம் செய்ததற்காக தான் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் நடக்கவிருந்த திருமணத்தின் போது திடீரென மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது

ஆனாலும் இது குறித்து மணமகள் வீட்டார் போலீசாரிடம் புகார் கொடுக்கவில்லை என்பதால் போலீசார் இந்த பிரச்சினையில் தலையிடவில்லை. இருப்பினும் மாப்பிள்ளையைத் தேடும் பணியில் இருவீட்டாரும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.