close
Choose your channels

திருமணமான மூன்றே நாளில் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை: அதிர்ச்சி தகவல்

Thursday, September 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணமான மூன்று நாளில் புதுமாப்பிள்ளை ஒருவர் தூக்கில் தொங்கியதால் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பேரூர் என்ற பகுதியைச் சேர்ந்த வெல்டிங் ஒர்க் ஷாப் உரிமையாளர் கோவிந்தராஜ் என்பவர் மஞ்சுளா என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி சமீபத்தில் அவர் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணமாகி மூன்றே நாட்களில் மஞ்சுளாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கோவிந்தராஜ் மற்றும் மஞ்சுளாவை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அங்கு பெற்றோரின் மூளைச் சலவைக்கு மயங்கிய மஞ்சுளா, கோவிந்தராஜனை பிரிய சம்மதித்து இனிமேல் கணவருடன் வாழ விருப்பமில்லை என்றும் காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு பெற்றோரிடம் சென்று விட்டார்.

பெற்றோர் பேச்சை கேட்டு காதல் மனைவி தன்னை விட்டு பிரிந்ததால் மனம் உடைந்த கோவிந்தராஜ், காவல்நிலையத்தில் இருந்து நேராக வீட்டிற்குச் சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனது மகனின் தற்கொலைக்கு காரணம் மஞ்சுளாவின் பெற்றோர்கள் என்றும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் கோவிந்தராஜன் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருமணமான மூன்றே நாட்களில் காதல் மனைவியை தன்னுடன் வாழ விருப்பமில்லை என்று காவல் நிலையத்தில் எழுதிக்கொடுத்து சென்றதால் ஏற்பட்ட விரக்தியில் புதுமாப்பிள்ளை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.