திருமணத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன் மணப்பெண் கழுத்தறுத்து கொலை: காதலனின் வெறிச்செயல்

  • IndiaGlitz, [Tuesday,July 07 2020]

திருமணம் நடக்க இருந்த நான்கு மணி நேரத்திற்கு முன்பு மணப்பெண் முன்னாள் காதலனால் கழுத்தறுபட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜாபூர் என்ற பகுதியில் உள்ள சோனு என்ற இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த நிலையில் அன்றைய தினம் காலை திருமணம் நடைபெறும் இடத்திற்கு மணப்பெண் சோனு தனது குடும்பத்தாருடன் வந்தார்

இந்த நிலையில் திருமணம் நடைபெற 4 மணி நேரம் மட்டுமே இருந்ததால் தனது தோழியுடன் சோனு பியூட்டி பார்லருக்கு சென்று மேக்கப் போடுவதற்காக சென்றார். அப்போது அவரது முன்னாள் காதலனிடம் இருந்து போன் வந்தது. எங்கே இருக்கிறாய்? என்று காதலன் கேட்க அதற்கு சோனு, தான் பியூட்டி பார்லரில் மேக்கப் போட்டுக் கொண்டு இருப்பதாக கூறியுள்ளார்

இதனை அடுத்து தனது நண்பருடன் பியூட்டி பார்லருக்கு விரைந்து வந்த காதலன் மணப்பெண்ணின் கழுத்தில் கத்தியால் அறுத்து விட்டு தப்பி ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்த சோனு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மரணம் அடைந்தார். இந்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து காதலனுடன் வந்த நண்பரை கைது செய்தனர். தற்போது காதலன் தலைமறைவாக உள்ளதால் அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்

திருமணம் நடைபெறுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னர் மணப்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

பிபிஈ உடையணிந்து நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு பிபிஈ உடை வழங்குவது வழக்கமாக உள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர்களை பாதுகாக்க இந்த உடை பெரிதும் உதவியாக இருக்கும்

'குட்டி ஸ்டோரி' பாடலின் 'தல' வெர்ஷன்: இணையத்தில் வைரல்

தல என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படும் தோனிக்கு இன்று 39 ஆவது பிறந்தநாள். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை நள்ளிரவு 12 மணி முதல்

அடுத்த மாத மின்கட்டணத்திற்கு சிறுநீரகங்களை தான் விற்க வேண்டும்: பிரபல நடிகரின் ஷாக் பேட்டி

மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான மின் கட்டணம் வந்திருப்பதாகவும் இந்த மாதம் தனது ஓவியங்களை விற்று மின் கட்டணத்தை கட்டியதாகவும்

'செத்துப்போ' என கூறிய காதல் மனைவி, தூக்கில் தொங்கிய கணவன்: திருமணமான இரண்டே மாதத்தில் சோகம்

திருமணமான இரண்டே மாதங்களில் காதல் மனைவி 'செத்துப்போ'என கூறியதை அடுத்து மனம் உடைந்த கணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்தியாவை அடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலும் தடையா? டிக்டாக் நிறுவனத்திற்கு சிக்கல்

இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களிடையே கால்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.