close
Choose your channels

திருமணத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன் மணப்பெண் கழுத்தறுத்து கொலை: காதலனின் வெறிச்செயல்

Tuesday, July 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணம் நடக்க இருந்த நான்கு மணி நேரத்திற்கு முன்பு மணப்பெண் முன்னாள் காதலனால் கழுத்தறுபட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜாபூர் என்ற பகுதியில் உள்ள சோனு என்ற இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த நிலையில் அன்றைய தினம் காலை திருமணம் நடைபெறும் இடத்திற்கு மணப்பெண் சோனு தனது குடும்பத்தாருடன் வந்தார்

இந்த நிலையில் திருமணம் நடைபெற 4 மணி நேரம் மட்டுமே இருந்ததால் தனது தோழியுடன் சோனு பியூட்டி பார்லருக்கு சென்று மேக்கப் போடுவதற்காக சென்றார். அப்போது அவரது முன்னாள் காதலனிடம் இருந்து போன் வந்தது. எங்கே இருக்கிறாய்? என்று காதலன் கேட்க அதற்கு சோனு, தான் பியூட்டி பார்லரில் மேக்கப் போட்டுக் கொண்டு இருப்பதாக கூறியுள்ளார்

இதனை அடுத்து தனது நண்பருடன் பியூட்டி பார்லருக்கு விரைந்து வந்த காதலன் மணப்பெண்ணின் கழுத்தில் கத்தியால் அறுத்து விட்டு தப்பி ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்த சோனு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மரணம் அடைந்தார். இந்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து காதலனுடன் வந்த நண்பரை கைது செய்தனர். தற்போது காதலன் தலைமறைவாக உள்ளதால் அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்

திருமணம் நடைபெறுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னர் மணப்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.