close
Choose your channels

மணப்பெண்ணிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய மணமகன் நண்பர்கள்! எதற்கு தெரியுமா?

Saturday, September 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமண நேரத்தில் மணமகன் நண்பர்கள் திடீரென மணமகளிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய சம்பவம் உசிலம்பட்டி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஹரிபிரசாத் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பூஜா என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இந்த திருமணம் இன்று தனியார் மண் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்தின் போது மணமகன் நண்பர்கள் மற்றும் மணமகள் தோழிகள் பலரும் வருகை தந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் மணமகனின் நண்பர்கள் திடீரென மணமகளிடம் பத்திரத்தில் கையெழுத்து இடுமாறு வலியுறுத்தினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் அவர்கள் கொடுத்த பாத்திரத்தை வாங்கி படித்த போது ஆச்சரியம் அடைந்தார். அந்த பத்திரத்தில் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு கிழமைகளில் தங்கள் நண்பரான மணமகனை கிரிக்கெட் விளையாட மணமகள் அனுமதிக்க வேண்டும் என்றும் இதற்கு சம்மதம் தெரிவித்து இந்த பாத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது.

இதை படித்து பார்த்து ஆச்சரியம் அடைந்த மணமகள் பத்திரத்தில் கையெழுத்திட்டு தந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.