மணப்பெண்ணிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய மணமகன் நண்பர்கள்! எதற்கு தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,September 10 2022]

திருமண நேரத்தில் மணமகன் நண்பர்கள் திடீரென மணமகளிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய சம்பவம் உசிலம்பட்டி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஹரிபிரசாத் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பூஜா என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இந்த திருமணம் இன்று தனியார் மண் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்தின் போது மணமகன் நண்பர்கள் மற்றும் மணமகள் தோழிகள் பலரும் வருகை தந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் மணமகனின் நண்பர்கள் திடீரென மணமகளிடம் பத்திரத்தில் கையெழுத்து இடுமாறு வலியுறுத்தினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் அவர்கள் கொடுத்த பாத்திரத்தை வாங்கி படித்த போது ஆச்சரியம் அடைந்தார். அந்த பத்திரத்தில் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு கிழமைகளில் தங்கள் நண்பரான மணமகனை கிரிக்கெட் விளையாட மணமகள் அனுமதிக்க வேண்டும் என்றும் இதற்கு சம்மதம் தெரிவித்து இந்த பாத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது.

இதை படித்து பார்த்து ஆச்சரியம் அடைந்த மணமகள் பத்திரத்தில் கையெழுத்திட்டு தந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய டைட்டில்: சிம்பு அறிவிப்பு!

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'

'மிஸ் யூ': திருமணமான ஒரே வாரத்தில் வேதனையான பதிவு செய்த புகழ்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது திரையுலகில் பிஸியாக இருக்கும் புகழ் கடந்த வாரம் நீண்ட நாள் காதலியான பென்சியாவை திருமணம் செய்துகொண்டார்

வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வனை அடுத்து இன்னொரு பிரமாண்ட விழா: கலைப்புலி எஸ் தாணு தகவல்

சமீபத்தில் சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது என்பது தெரிந்ததே.

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்: பாலிவுட்டை அதிர வைத்த சாம் CS

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இசையமைப்பாளர் சாம் CS இப்போது தனது இசையால் பாலிவுட்டை அதிர வைத்துள்ளார். 'விக்ரம் வேதா' இந்திப்பதிப்பின் இசை பெரும் அதிர்வை உண்டாக்கியதுடன்

தற்கொலை குறித்த விழிப்புணர்வு கட்டுரை: தூரிகையின் 2 ஆண்டுகளுக்கு முந்தைய பதிவு வைரல்!

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலன் அவர்களின் மகள் தூரிகை நேற்று இரவு திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் அவர் தற்கொலை குறித்த