பிரிட்டன் இளவரசரை அடுத்து பிரதமருக்கும் கொரோனா!

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், ஏழை பணக்காரர் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என எந்தவித பேதமும் இன்றி சாதாரண குடிமகன் முதல் விவிஐபி வரை அனைவரையும் தாக்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது அடுத்த அதிர்ச்சியாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரிட்டன் நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் தற்போது நாட்டின் பிரதமருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது டுவிட்டரில் கூறும்போது ’கடந்த 24 மணி நேரத்தில் எனக்கு இலேசான கொரோனா பாதிப்பு அறிகுறி தெரிந்தது. இதனை அடுத்து நான் பரிசோதனை செய்தபோது பாசிடிவ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். இருப்பினும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அரசு வேலையை நான் கொண்டிருக்கின்றேன்’ என்று வீடியோ ஒன்றில் பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

More News

10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல் 

பொதுவாக கொரோனா வைரஸ் வயதானவர்களை தாக்கி வருவதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். வயதானவர்களுக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு: மத்திய அரசுக்கு சரத்குமாரின் வேண்டுகோள்

இன்று காலை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் செய்தியாளர்களை சந்தித்து ஒருசில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

கொரோனா எதிரொலி: எல்லையை இழுத்து மூடிய தமிழக கிராமம்

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க ஒவ்வொருவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தீவிரமாக வலியுறுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள ஒரு கிராமமே தன்னை தனிமைப்படுத்தி கொள்வது

அணுவை விடவும் சிறியது, அணுகுண்டை போல் கொடியது: வைரமுத்துவின் கொரோனா பாடல்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றை கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு எதிரொலி: மீண்டும் ராமாயணத்தை ஒளிபரப்பும் தூர்தர்ஷன்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.