விஜய் மகன் சஞ்சய் படத்தை பிரிட்டோ தயாரிக்கின்றாரா? அவரே அளித்த அளிக்கம்

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை அவரது நெருங்கிய உறவினரான பிரிட்டோ தயாரித்த நிலையில் விஜய் மகன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தையும் பிரிட்டோ தான் தயாரிக்க இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரிட்டோ விளக்கம் அளித்து உள்ளார்

விஜய் மகன் சஞ்சய்க்கு இயக்குனராக தான் அதிக ஆர்வம் உள்ளது. அவருக்கு ஹீரோவாக நடிக்கும் ஆர்வம் இருக்கிறதா இல்லையா என்பது கூட எனக்கு தெரியாது. தற்போது அவர் கனடாவில் படித்து வருகிறார். படித்து முடித்த பிறகு அவர் எந்த துறையை தேர்ந்தெடுக்கிறார் என்பதை அதன் பின் தான் முடிவு செய்ய முடியும். சஞ்சய் படத்தை நான் தயாரிக்கவிருப்பதாக் வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி. இதுகுறித்து நான் விஜய்யிடம் பேசினதே இல்லை’ என்று கூறினார்

மேலும் விஜய்யை வைத்து செந்தூரப்பாண்டி உள்பட ஒருசில படங்களை தயாரித்ததற்கும், மாஸ்டர் படத்தை தயாரித்ததற்கும் என்ன வித்தியாசம் என்று கேள்விக்கு பதிலளித்த பிரிட்டோ, ‘அப்போதும் சரி இப்போதும் சரி விஜய் கடின உழைப்பாளி என்றும், செந்தூரப்பாண்டி படம் எடுக்கும் போதும் சரி ’மாஸ்டர்’ படம் எடுக்கும் போதும் சரி, ஒவ்வொரு ஷாட் முடிந்த பின்னரும் ’அங்கிள் உங்களுக்கு இது ஓகேவா? நீங்க ஹாப்பியா? என்று விஜய் கேட்பார் என்றும் அவருடைய நடைமுறையில் எந்த மாறுபாடையும் நான் பார்க்கவில்லை என்றும் அதே எளிமை அதே குணம் என்றும் கூறினார்

மேலும் ’மாஸ்டர்’ திரைப்படம் விஜய்யின் மற்ற படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட படமாக இருக்கும் என்று கூறிய பிரிட்டோ, ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாவதாக வெளிவரும் வதந்திகள் குறித்து கூறிய போது ’மாஸ்டர்’ திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பதால் ஓடிடியில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என்றும் விஜய்யின் ரசிகர்கள் அவரது படத்தை திரையில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே விஜய் உள்பட அனைவருடைய விருப்பம் என்றும் அதனால் ஓடிடியில் ’மாஸ்டர்’ படம் ரிலீஸ் ஆகாது என்றும் உறுதிபட கூறியுள்ளார்

More News

4 மாத வீட்டு வாடகையை கேட்டவர் ஓட ஓட விரட்டி கொலை: சென்னையில் பரபரப்பு

கொரனோ வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதும் இந்த ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள்

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளை நீக்குங்கள்: மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பதும், அதில் தமிழக வீரர் பழனி என்பவரும்

பார்வையற்ற முதியவருக்கு பெண் செய்த உதவி: உலகம் முழுவதும் வைரலாகும் வீடியோ

பார்வையற்ற முதியவர் ஒருவரை பேருந்தில் ஏற்றிவிட பெண் ஒருவர் அங்குமிங்கும் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ஒரு நாள் முழுவதும் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது என்பது குறிப்பிடப்பட்டது

வேறு எந்த நோயும் இல்லை: கொரோனாவால் மட்டும் உயிரிழந்த சென்னை இளம்பெண்

சென்னையைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் வேறெந்த இணை நோயும் இல்லாமல் கொரோனா தாக்கத்தால் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரே உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மீண்டும் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே அவ்வப்போது தனது சமூக வலைதளத்திலும் தனது அதிகாரபூர்வ இணையதளத்திலும் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி