பாசமலர் படத்தை மிஞ்சி… ஒரேநாளில் அண்ணன்-தங்கை இருவரும் உயிர்நீத்த சோகச் சம்பவம்!!!

  • IndiaGlitz, [Thursday,September 17 2020]

 

அண்ணன்-தங்கை உறவுக்கு பெரும்பாலும் பாசமலர் படமே உதாரணமாகக் கூறப்படுகிறது. அந்தவகையில் 100 வயதைத் தொட்ட அண்ணன்-தங்கை இருவரும் ஒரேநாளில் உயிரிழந்த நெகிழ்ச்சி சம்பவம் அவர்களின் உறவினர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அடுத்த தாராபுரம் அடுத்த தும்பலப்பட்டி எனும் கிராமத்தில் வசித்து வந்தவர் காளியப்பன். வயது 101. இவருடன் உடன் பிறந்தவர்கள் 3 சகோதரி உட்பட மொத்தம் 5 பேர். இதில் ஏற்கனவே 4 பேர் உயிரிழந்த நிலையில் இளைய சகோதரி நல்லாத்தாள்(98) மட்டும் உயிருடன் இருந்திருக்கிறார். காளியப்பன், தங்கை நல்லாத்தாள் ஆகிய இருவரும் ஒரே ஊரில் தங்களது பேரன், பேத்திகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே இருவருக்கும் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. அப்போதே தங்கை நல்லாத்தாள் அண்ணன் உயிரிழந்தவுடன் நானும் இறந்துவிடுவேன். எங்கள் இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்துவிடுங்கள் எனக் கூறியிருக்கிறார். அவர் கூறியது மாதிரியே தற்போது நடைபெற்று இருக்கிறது. நேற்றுமுன்தினம் உடல்நலக் குறைவால் காளியப்பன் உயிரிழந்து இருக்கிறார். அவர் இறந்த செய்தியை நல்லாத்தாளுக்கு தெரிவித்த ஒரு சில மணிநேரத்தில் நல்லாத்தாளும் உயிரிழந்து இருக்கிறார். இச்சம்பவம் அக்கிராமத்து மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் உயிர்நீத்த காளியப்பனின் பேரன் பெரியசாமி கூறும்போது பாட்டி அப்பவே கூறியது, அண்ணன் இறந்தவுடன் நானும் இறந்து விடுவேன் என்று. அவர்களை தற்போது அருகருகே அடக்கம் செய்து உள்ளோம் என நெகிழ்ச்சிப் பொங்க தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இரு கைகளாலும் எழுதி உலகச் சாதனை படைத்த 17 வயது சிறுமி…வைரல் சம்பவம்!!!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் 17 வயது சிறுமி ஒருவர் ஒரே நிமிடத்தில் இரு கைகளாலும் 45 வார்த்தைகளை எழுதி உலகச் சாதனை படைத்து இருக்கிறார்.

கௌதம் கார்த்திக் அடுத்த படத்தை இயக்கும் விஜய் பட இயக்குனர்!

கோலிவுட் திரையுலகின் இளம் நாயகனான கௌதம் கார்த்திக் ஏற்கனவே ஒருசில படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை விஜய் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர்

பெற்றதாயின் கனவு… 56 ஆயிரம் கி.மீ ஸ்கூட்டரில் அழைத்துச் சென்ற தலைமகன்… நெகிழ்ச்சி சம்பவம்!!!

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது தாயை அழைத்துக் கொண்டு 56 ஆயிரம் கி.மீ பயணத்தை ஸ்கூட்டரிலேயே மேற்கொண்டு இருக்கிறார்.

இயக்குனராகிறார் சௌந்தர்யா ரஜினிகாந்தின் உதவியாளர்: ஹீரோ யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' மற்றும் தனுஷ் நடித்த 'விஐபி 2' ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்பது தெரிந்ததே.

தமிழக அரசுக்கு சூர்யாவின் நெஞ்சார்ந்த பாராட்டு: பரபரப்பு தகவல் 

நடிகர் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீட் தேர்வு குறித்து வெளியிட்ட அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.