close
Choose your channels

பாசமலர் படத்தை மிஞ்சி… ஒரேநாளில் அண்ணன்-தங்கை இருவரும் உயிர்நீத்த சோகச் சம்பவம்!!!

Thursday, September 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாசமலர் படத்தை மிஞ்சி… ஒரேநாளில் அண்ணன்-தங்கை இருவரும் உயிர்நீத்த சோகச் சம்பவம்!!!

 

அண்ணன்-தங்கை உறவுக்கு பெரும்பாலும் பாசமலர் படமே உதாரணமாகக் கூறப்படுகிறது. அந்தவகையில் 100 வயதைத் தொட்ட அண்ணன்-தங்கை இருவரும் ஒரேநாளில் உயிரிழந்த நெகிழ்ச்சி சம்பவம் அவர்களின் உறவினர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அடுத்த தாராபுரம் அடுத்த தும்பலப்பட்டி எனும் கிராமத்தில் வசித்து வந்தவர் காளியப்பன். வயது 101. இவருடன் உடன் பிறந்தவர்கள் 3 சகோதரி உட்பட மொத்தம் 5 பேர். இதில் ஏற்கனவே 4 பேர் உயிரிழந்த நிலையில் இளைய சகோதரி நல்லாத்தாள்(98) மட்டும் உயிருடன் இருந்திருக்கிறார். காளியப்பன், தங்கை நல்லாத்தாள் ஆகிய இருவரும் ஒரே ஊரில் தங்களது பேரன், பேத்திகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே இருவருக்கும் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. அப்போதே தங்கை நல்லாத்தாள் அண்ணன் உயிரிழந்தவுடன் நானும் இறந்துவிடுவேன். எங்கள் இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்துவிடுங்கள் எனக் கூறியிருக்கிறார். அவர் கூறியது மாதிரியே தற்போது நடைபெற்று இருக்கிறது. நேற்றுமுன்தினம் உடல்நலக் குறைவால் காளியப்பன் உயிரிழந்து இருக்கிறார். அவர் இறந்த செய்தியை நல்லாத்தாளுக்கு தெரிவித்த ஒரு சில மணிநேரத்தில் நல்லாத்தாளும் உயிரிழந்து இருக்கிறார். இச்சம்பவம் அக்கிராமத்து மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் உயிர்நீத்த காளியப்பனின் பேரன் பெரியசாமி கூறும்போது பாட்டி அப்பவே கூறியது, அண்ணன் இறந்தவுடன் நானும் இறந்து விடுவேன் என்று. அவர்களை தற்போது அருகருகே அடக்கம் செய்து உள்ளோம் என நெகிழ்ச்சிப் பொங்க தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.