விவசாயிகளை விட்டுக் கொடுக்க கூடாது. ஜி.வி.பிரகாஷ்

  • IndiaGlitz, [Monday,March 20 2017]

தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 7 நாட்களாக காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. விவசாயம் என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பு என்பதால் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் ஆகிய பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளதோடு, ஒரு தமிழனாக அனைவரும் இந்த போராட்டத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தி ஒன்றில் கூறியிருப்பதாவது:

தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம். டெல்லியில் நம் தமிழக விவசாயிகள் ஆறாவது நாளாக போராடி வருகின்றனர். ஆனால் நாம் எல்லோரும் பார்த்து கொண்டிருக்கின்றோம். தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்கள் கோரிக்கை நிறைவேற குரல் கொடுக்க வேண்டும். இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான். அதை நாம் விட்டுக்கொடுக்க கூடாது.

நம்முடைய ஆதரவை கொடுக்க வேண்டியது மிக முக்கியம். எனவே எல்லா தமிழர்களும் ஒன்று சேருங்கள். டெல்லியில் இருக்கும் நம்முடைய விவசாயிகள் நம்முடைய உறவினர்களுக்கு நம் குடும்பத்தாருக்கு நமது ஆதரவை தெரிவிக்க வேண்டும்.

டெல்லியில் இருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளின்படி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும், நிலுவையில் இருக்கும் விவசாய கடன்கள் கொடுக்கப்பட வேண்டும், வறட்சி நிவாரண நிதி கொடுக்கப்பட வேண்டும், இனிமேல் எந்த தற்கொலைகளும் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் என்று ஒரு தமிழனாய் இந்த கோரிக்கையை வைக்கிறேன்

இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தனது வீடியோ செய்தியில் கூறியுள்ளார்.

More News

நடிகை ரம்பா விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய அறிவுரை

பிரபல நடிகையாக இருந்த ரம்பா, கடந்த 2010ஆம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிகள் கனடாவில் செட்டில் ஆகிய நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன...

இது எனது கனவுப்படம் அல்ல. 'காற்று வெளியிடை இசை விழாவில் கார்த்தி

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சூர்யா, கார்த்தி, அதிதி, சுஹாசினி உள்பட பலர் கலந்து கொண்டனர்...

இளையராஜா-எஸ்பிபி பிரச்சனைக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் முதிர்ச்சியான பதில்

கடந்த சில நாட்களாக இசைஞானி இளையாராஜா பாடகர் எஸ்பிபி-க்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் கோலிவுட்டில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது. இருவருமே இசைத்துறையில் மேதாவிகள் என்பது மட்டுமின்றி கிட்டத்தட்ட திரையுலகினர் அனைவருக்குமே நெருக்கமானவர்களாகவும் உள்ளனர்...

அருள்நிதியின் அடுத்த பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய அருள்நிதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ஆறாது சினம்' படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது 'பிருந்தாவனம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினி-ரஞ்சித் படத்தின் நாயகி குஷ்பு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடையவுள்ளது.