அரை நிர்வாண உடலில் பெயிண்டிங்: சபரிமலை பெண் போராளி மீது நடவடிக்கை எடுத்த பி.எஸ்.என்.எல்

  • IndiaGlitz, [Wednesday,July 01 2020]

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று போராடிய பெண் போராளி ரெஹானா பாத்திமா என்பவர் சமீபத்தில் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து தனது குழந்தைகளையே தனது உடம்பில் பெயிண்டிங் வரைய செய்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் காவல்துறையினர் ரெஹானா மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர்.

இந்த நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம், ரெஹானாவுக்கு அதிரடியாக நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. ரெஹானா தங்கள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்றும், அவர் மீது எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும், எனவே அவர் தற்போது குடியிருக்கும் பி.எஸ்.என்.எல் குடியிருப்பில் இருக்கும் வீட்டை உடனே காலி செய்ய வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது

கடந்த மே மாதம் சர்ச்சைக்குரிய ஒரு பதிவை ரெஹானா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகவும், இன்னும் 30 நாட்களில் பி.எஸ்.என்.எல் குடியிருப்பில் இருந்து அவர் வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் பி.எஸ்.என்.எல் நோட்டீஸ் அனுப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் போஸ்கோ சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்யக்கூடாது என கேரள உயர்நீதிமன்றத்தில் ரெஹானா ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார் என்பதும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

சொந்த கட்சியினரே வைத்த சூன்யம்: நேபாள பிரதமர் பதவிக்கு ஆபத்து!!!

நேபாளத்தின் தற்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒளி. இவரை பதவியில் இருந்து விலகுமாறு சொந்தக் கட்சியினரே வலியுறுத்தும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

புகார் அளிக்க பெண் முன் சுய இன்பம்: வைரலான வீடியோவால் காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட்

சொத்து பிரச்சனை தொடர்பாக காவல் துறைக்கு புகார் அளிக்க வந்த பெண் முன், சுய இன்பம் செய்த போலீஸ் அதிகாரி ஒருவரின் வீடியோ வைரல் ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

2வது மாடியில் கேட்பாரற்று 3 நாட்கள் கிடந்த தாயின் பிணம்: 4வது மாடியில் குடியிருந்த மகன் மீது வழக்கு

80 வயது தாயின் பிணம் மூன்று நாட்கள் கேட்பாரற்று இரண்டாவது மாடியில் இருந்த நிலையில், அதே அபார்ட்மெண்டில் நான்காவது மாடியில் குடியிருந்த அவரது மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால்

'அர்ஜூன் ரெட்டி' பட நடிகை கொடுத்த பாலியல் புகார்: 'போக்கிரி' பட ஒளிப்பதிவாளர் கைது!

https://tamil.asianetnews.com/cinema/famous-camera-man-shyam-k-naidu-bail-cancel-after-sai-sudha-cheating-complaint-qcsd7r

இனிமே தா ஆட்டமே இருக்கு… WHO வின் புது எச்சரிக்கை!!!

கொரோனா வைரஸ் ஏற்டுத்திய தாக்கத்தால் உலகமே அரண்டு போயிருக்கிறது