close
Choose your channels

புத்தரும் அப்துல் கலாமும் ஒன்றுதான்: கமல்ஹாசன்

Tuesday, October 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகனும், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அரசியல் கூட்டங்கள் மட்டுமின்றி கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடையேயும் அவ்வபோது பேசி வருகிறார் என்பது. அந்த வகையில் இன்று முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான மறைந்த அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தினத்தை அடுத்து கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில், ‘புத்தரும், கலாமும் ஒன்றுதான் என்றும், நாம் தான் வெவ்வேறாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறிய கமல்ஹாசன், ‘அப்துல்கலாமிடம் 3 மணி நேரம் பேசியது என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்தார்.

மேலும் ’கல்வியின் பின் மாணவர்கள் ஒரு மந்தையாக செல்லக்கூடாது என்றும், கற்பது என்பதை விட புரிவது என்பதே கல்வி என்று கூறிய கமல், ‘மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்? என்றும், கலாம் கண்ட கனவை நனவாக்க, மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வாருங்கள். வந்தால் வரவேற்பேன்' என்றும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.