தற்காலிக ஓட்டுனர் ஏற்படுத்திய விபத்தால் இளம்பெண் மரணம். பொதுமக்களின் உயிருக்கு என்ன பாதுகாப்பு?

  • IndiaGlitz, [Tuesday,May 16 2017]

போக்குவரத்து ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓடவில்லை
இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க தற்காலிக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மூலம் பேருந்துகளை இயக்கி வருகிறது தமிழக அரசு. ஆனால் தற்காலிக ஓட்டுனர்கள் அனுபவம் இல்லாதவர்கள் என்பதால் இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்
இந்த நிலையில் திருப்பூர் நட்ராஜ் திரையரங்கம் அருகே தற்காலிக ஓட்டுனர் ஓட்டிய அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்துகளை இயக்கி பொதுமக்களின் உயிரை பணயம் வைக்க வேண்டாம் என்றும் விரைவில் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனடியாக தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினர்களின் கருத்தாக உள்ளது.

More News

24 மணி நேர இடைவெளியில் இரட்டை விருந்து தரும் நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் 'டோரா' திரைப்படம் வெளியான நிலையில் அவர் தற்போது 'இமைக்கா நொடிகள்', 'கொலையுதிர்க்காலம்', 'வேலைக்காரன்' மற்றும் 'அறம்' ஆகிய நான்கு தமிழ்ப்படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்...

ரஜினியை மிரட்டவே ப.சிதம்பரம் வீட்டில் சோதனை: கராத்தே தியாகராஜன்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர்களின் சென்னை நுங்கம்பாக்கம் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இந்தியாவில் உள்ள பல இடங்களில் ஒரே நேரத்தில் இன்று காலை முதல் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது...

என்னால நிற்க முடியவில்லை. ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று இரண்டாவது நாளாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது.

என்னால நிற்க முடியவில்லை. ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று இரண்டாவது நாளாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது...

வேலைநிறுத்தம் குறித்து முக்கிய முடிவு எடுத்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற நடிகர் விஷால் சமீபத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகள் வைத்தார். இந்த கோரிக்கைகள் குறித்து விஷால் தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை திரையுலகினர் சந்தித்தனர்...