கொரோனா பிரச்சனையால் 112 செய்தித்தாள் நிறுவனங்களை நிறுத்தப் போகும் தொழிலதிபர்!!! திடுக்கிடும் தகவல்!!!

  • IndiaGlitz, [Friday,May 29 2020]

 

ஆஸ்திரேலியாவில் செய்தித்தாள் நிறுவனங்களை கிளைப்பரப்பி இருக்கும் ஒரு பெரிய நிறுவனம்தான் The Garp Australia. இதன் நிர்வாகி ராபர் முட்டோச். கொரோனா ஊரடங்கினால் செய்தித்தாள்கள் அச்சடிப்பது முற்றிலும் தடைப் பட்டு இருக்கிறது. மேலும் பொருளாதார ரீதியில் கடுமையான வீழ்ச்சியையும் இவர் சந்தித்து இருக்கிறார். எனவே செய்தித்தாள்களை அச்சடிப்பதை கடந்த வாரம் முதலே இந்நிறுவனம் நிறுத்தி இருக்கிறது. 112 செய்தித்தாள்களும் ஒரே நேரத்தில் அச்சடிப்பதை நிறுத்தினால் எவ்வளவு பேருக்கு வேலை காலியாகும் என நினைத்துப் பார்க்கும் போதே தலையைச் சுற்றிக்கொண்டு வருகிறது. தற்போது இந்தியாவிலும் இந்நிலைமை தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் கூட சிறு சிறு செய்தித்தாள் நிறுவனங்கள் அதன் அச்சாக்கத்தை நிறுத்தி இருக்கின்றன.

The Garp Australia நிறுவனம் தற்போது 112 செய்தித்தாள்களை அச்சடிப்பதை நிறுத்திவிட்டு ஆஸ்திரேலியாவின் 76 பிராந்தியங்களில் இருந்து இணையத் தொடர்பு வாயிலாக செய்திகளை அனுப்ப ஆரம்பித்து இருக்கிறது. 36 செய்தி நிறுவனங்கள் முற்றிலும் அச்சாக்கத்தை நிறுத்தி இருக்கின்றன. கொரோனா ஊரடங்கினால் பழமையான செய்தி ஊடகங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. புதிய தொழில்நுட்பம், புதிய வடிவம் என்று சிலர் புதுப்பித்துக் கொண்டும் வருகின்றனர். கிராஃப் ஆஸ்திரேலியா மட்டுமல்ல 85 ஆண்டுகள் பழமை வாயந்த செய்தி நிறுவனமான ஆஸ்திரேலியா அசோசியேஷன் கூட தனது அச்சாக்கத்தை நிறுத்திவிட்டது. இதேபோல ஹேர்பர்ட் மெர்குரி, N.T News போன்ற பிரபலமான செய்தி நிறுவனங்கள் கூட தனது செயல்பாட்டை பாதியாக குறைத்து இருக்கின்றன. இதனால் வேலையிழப்பும் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா ஊடகத் துறையையும் விட்டு வைக்கவில்லை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக The Garp Australia இருக்கிறது.

More News

திநகர் ரெங்கநாதன் தெரு 150 கடைகளை மூட உத்தரவு: சென்னை மாநகராட்சி அதிரடி

கொரோனா வைரஸ் காரணமாக நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காம்ப்ளக்ஸ் கடைகள் தவிர தனிக் கடைகள் திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டது.

தந்தை உயிரை காப்பாற்ற கல்லீரல் தானம் கொடுத்த 25 வயது இளம் இயக்குனர்

மலையாள திரையுலகில் 23 வயதில் இயக்குனராகி தற்போது முன்னணி இயக்குனர் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆதின் ஒல்லூர் என்பவர் தனது தந்தைக்கு கல்லீரல் தானம் கொடுத்து

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எடுத்துக்கொண்ட பிறகு அதிபர் ட்ரம்ப் முற்றிலும் நலமாக இருக்கிறார்!!! வெள்ளைமாளிகை அறிவிப்பு!!!

மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பாதுகாப்பானது அல்ல என்று உலகச் சுகாதார நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இருந்தது

'அர்ஜூன் ரெட்டி' நடிகை கொடுத்த புகார்: பிரபல ஒளிப்பதிவாளர் கைது

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி'. இந்த படம் 'ஆதித்யா வர்மா'என்ற பெயரில் தமிழிலும் ரீமேக் ஆனது என்பதும் இந்த படத்தில் துருவ் விக்ரம்

இதற்குமுன் தமிழகத்தை வெட்டுக்கிளிகள் தாக்கியிருக்கிறதா??? வரலாறு என்ன சொல்கிறது???

வெட்டுகிளிகளின் படையெடுப்பால் இந்தியா, பாகிஸ்தானை அடுத்து பங்களாதேஷ், ஈரான் எனப் பல நாடுகள் கடுமையான அழிவுகளைச் சந்திக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.