விஜய் பெயரை இனி யாரும் சொல்ல கூடாது, இப்படி தான் சொல்லணும்: புஸ்ஸி ஆனந்த்


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் பெயரை இனி யாரும் சொல்லக்கூடாது என்றும் தளபதி என்று தான் சொல்ல வேண்டும் என்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் விஜய் மக்கள் இயக்கம், மகளிர்க்கு செய்யும் சமூக பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது
இதில் ஏராளமான விஜய் ரசிகைகள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது ஒரு பெண் ’நான் ஒரு பெரிய விஜய் ரசிகை’ என்று கூறிய போது குறுக்கிட்ட புஸ்ஸி ஆனந்த், ‘எப்போதும் தலைவன் பெயரை சொல்லக்கூடாது, இனி தளபதி என்று மட்டும் தான் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
இதனை அடுத்து பேசியவர்கள் விஜய்யின் பெயரை சொல்லாமல் தளபதி என்று மட்டுமே கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments