சி.ஆர்.சரஸ்வதி மீது அழுகிய தக்காளி வீச்சு. ஆர்.கே.நகர் மக்கள் ஆத்திரம்

  • IndiaGlitz, [Saturday,April 01 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தபோது அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த சி.ஆர்.சரஸ்வதி 'அம்மா இட்லி சாப்பிட்டார், நலமாக இருக்கின்றார். மிகவிரைவில் போயஸ் கார்டன் திரும்புவார்' என்று கூறினார். ஆனால் ஜெயலலிதாவின் பிணம் மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டன் திரும்பியது.
இந்நிலையில் தற்போது சசிகலா அணியில் இருக்கும் சி.ஆர்.சரஸ்வதி, ஆர்.கே.நகரில் போட்டியிடும் தினகரனுக்காக தொப்பி சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். சி.ஆர்.சரஸ்வதியை பார்த்ததும் அவர் ஜெயலலிதா குறித்து கூறியது மக்களின் ஞாபகத்தில் வந்து, கோபத்தை ஏற்படுத்த அவர் மீது பொதுமக்கள் அழுகிய தக்காளி மற்றும் காய்கறிகளை வீசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சி.ஆர்.சரஸ்வதி, பிரச்சாரம் செய்யாமல் அந்த பகுதியில் இருந்து வேகமாக சென்றுவிட்டார்
ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் மக்கள், ஜெயலலிதாவின் மரணத்தை இன்னும் ஜீரணிக்க முடியாமல் சசிகலா தரப்பினர் மீது கடும் கோபத்தில் உள்ளதையே இந்த சம்பவம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More News

ரஜினி பட டைட்டிலில் விஜய் ஆண்டனியின் அடுத்த படம்

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி.

திருநங்கைகளுக்காக ராகவா லாரன்ஸ் செய்யவுள்ள உதவிகள்

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளரான ராகவா லாரன்ஸ் திரைத்துறையில் மட்டுமின்றி பல சமூக சேவைகள் செய்து வருகிறார்.

ரஜினியுடன் லைகா நிறுவனத்தின் ராஜூமகாலிங்கம் சந்திப்பு

லைகா நிறுவனம் ஈழத்தமிழர்களுக்காக இலங்கையில் நடத்தவுள்ள நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருந்து, பின்னர் அவர் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

ஜோசியம் சொன்னால் கடும் நடவடிக்கை. ஜோதிடர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

தேர்தல் என்று வந்துவிட்டால் கிட்டத்தட்ட ஒரு திருவிழா போன்று தான் காட்சி அளிக்கும்.

ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர் திடீர் கைது: ஏன் தெரியுமா?

சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.