ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். வெற்றிக்கனியை ருசிப்பது யார்?

  • IndiaGlitz, [Tuesday,March 14 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இரு அணிகளாக பிரிந்துள்ள சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணியினர் தங்களுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கின்றது என்பதை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல் கருதப்படுகிறது.

தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் அதிருப்தியை கொண்டிருக்கும் சசிகலா அணிக்கு இந்த தேர்தல் ஒரு அக்னிப்பரிட்சை. குறிப்பாக இந்த தேர்தலில் டிடிவி தினகரன், சசிகலா அணியின் சார்பில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் அதிருப்தியை பெற்றுள்ள நிலையில் டிடிவி தினகரன் நிற்பது உறுதியானால் தேர்தல் பரபரப்பின் உச்சத்திற்கே சென்றுவிடும். பெரியகுளம் பாராளுமன்ற தொகுதியில் தினகரன் போட்டியிட்டபோது பெய்த பணமழை ஆர்கேநகரிலும் தொடரலாம். அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த அமைச்சர் மற்றும் படைபரிவாரங்கள், காவல்துறை உள்பட பலர் தினகரனுக்கு ஆதரவாக களமிறங்க வாய்ப்பு உள்ளது. மேலும் இரட்டை இலை சின்னத்தை தக்க வைத்து கொள்ளூம் முயற்சியிலும் சசிகலா அணி தீவிரமாக இருப்பதால் வெற்றிக்கனியை பறித்துவிடலாம் என்று நினைக்கின்றனர்.

அதிமுக சசிகலா அணியில் இருந்து டிடிவி தினகரன் நிற்பது உறுதியானால் ஓபிஎஸ் அணிக்கு பாதி வெற்றி கிடைத்ததுபோலத்தான் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சசிகலா மீது அதிருப்தி ஏற்கனவே மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில் சசிகலாவின் உறவினர் என்றால் அந்த அதிருப்தியை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகவே மக்கள் கருதுவர். மேலும் ஓபிஎஸ் அணியில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி நட்ராஜை போல இவரையும் எம்.எல்.ஏ ஆக்க மக்கள் கண்டிப்பாக விரும்புவார்கள்.

இரண்டு அதிமுக அணிகளுக்கு இடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் களமிறங்குகிறார். இவர் மேற்கொண்டு அரசியல் பயணத்தை தொடரலாமா? வேண்டாமா? என்பதை இந்த தேர்தல் முடிவு தெரிவித்துவிடும். மணிப்பூர் இரோம் ஷர்மிளாவின் தியாகத்தை இவரோடு ஒப்பிட முடியாது என்றாலும் அவர் பெற்ற ஓட்டுக்களை இவர் பெற போகும் ஓட்டுக்களோடு ஒப்பிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக இரண்டாக பிரிந்தால் அதிகபட்ச பயன் திமுகவுக்கு தான் என்பதில் சந்தேகம் இல்லை. இது 1988 ஆம் ஆண்டு தேர்தலில் தெரிந்தது. ஆனால் அதிமுகவின் பிளவை எந்த அளவுக்கு செயல் தலைவர் சரியான வேட்பாளரை தேர்வு செய்து செயல்படுத்த போகிறார் என்பதில்தான் திமுகவின் வெற்றி உள்ளது.

மொத்தத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் வாக்காளர்கள் விழிப்புணர்வு பெற்றிருப்பதால் இரட்டை இலை சின்னமோ, பணமோ வெற்றியை தீர்மானிக்காது. மக்களின் நம்பிக்கையை பெற்ற வேட்பாளர்தான் வெற்றி பெறுவார் என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும் என்பதே அனைவரின் கணிப்பாக உள்ளது.

More News

கமல்ஹாசனை அடுத்து கருணாநிதியை வம்புக்கு இழுத்த சுப்பிரமணியன் சுவாமி

கடந்த சில நாட்களாக கமல்ஹாசனுடன் டுவிட்டர் போர் செய்து கொண்டிருந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தற்போது கருணாநிதி, கச்சத்தீவை தாரை வார்க்க அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியிடம் பணம் பெற்றதாக திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்...

விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்தில் இணைந்த இன்னொரு நாயகி

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல நாயகி ஒருவர் இணைந்துள்ளார்...

தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை. டெல்லி தமிழ் மாணவரின் தந்தை பேட்டி

டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பில் படித்து கொண்டிருந்த மாணவர் முத்துகிருஷ்ணன் நேற்று தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் தமிழகத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் அதிர்வலையை எழுப்பியது. மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றிருப்பதாகவும், பிī

டெல்லி பல்கலையில் தமிழக மாணவர் தற்கொலை. அதிர்ச்சி தகவல்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அந்த பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த தமிழக மாணவர் ஒருவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'2.0 சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் கோலிவுட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் '2.0'.