திரைப்படமாகிறது கோழிக்கோடு விமான விபத்து சம்பவம்: இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,August 21 2020]

பரபரப்பான ஒரு உண்மை சம்பவம் நடந்தால் அதனை உடனே திரையுலகினர் திரைப்படமாக எடுப்பது கடந்த பல வருடங்களாக வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாட்டையே உலுக்கிய கோழிக்கோடு விமான விபத்து சம்பவம் தற்போது திரைப்படமாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் 190 பயணிகளுடன் வந்து இறங்கிய ஏர் இந்தியா விமானம் திடீரென விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது. அதில் பைலட் மற்றும் துணை பைலட் உள்பட 18 பேர் பலியானார்கள் என்பதும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த விமான விபத்தை மையமாக வைத்து ’கேலிகெட் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராக உள்ளது. மலையாளத்தில் உருவாகும் இந்தப் படத்தை மாயா என்பவர் இயக்க உள்ளார் மஞ்சித் மரஞ்சேரி என்பவர் கதை திரைக்கதை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தை பெரும் பொருட்செலவில் டேக் ஆப் சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் குறித்த பஸ்ட் பஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

இன்றைய எஸ்பிபி உடல்நிலை: மருத்துவமனை அறிக்கையால் ரசிகர்கள் மகிழ்ச்சி

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த 5ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

1967ல் அண்ணாவின் ஆட்சி, 2021ல் விஜய் அண்ணாவின் ஆட்சி: ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு

1967இல் தமிழகத்தில் அறிஞர் அண்ணாவின் ஆட்சி என்றும் 2021ல் விஜய் அண்ணாவின் ஆட்சி என்றும் மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

முதல்முறையாக இணையும் கார்த்திக் சுப்புராஜ்-சிவகார்த்திகேயன்!

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும், இந்த படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து தற்போது தனுஷ் நடித்து முடித்துள்ள

இந்த நாட்டில் மட்டும் முகக்கவசம் அணியத் தேவையே இல்லை… திடுக்கிட வைக்கும் தகவல்!!!

கொரோனா வைரஸ் முதன் முதலில் தலைகாட்டிய நாடான சீனா தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலும் விடுபட்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

எஸ்பிபியா இது? சிவாஜி கணேசனுடன் இருக்கும் பழைய புகைப்படம் வைரல்!

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த 5ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருக்கிறது