காலையில் அம்மா... இரவில்... ஸ்ரீரெட்டியை அடுத்து உண்மையை உடைக்கும் இன்னொரு நடிகை

  • IndiaGlitz, [Tuesday,April 17 2018]

கடந்த சில நாட்களாக டோலிவுட் திரையுலகையே கதிகலங்க வைத்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி ஏற்கனவே 'பாகுபலி புகழ் ராணாவின் சகோதரர் உள்பட பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்த ஸ்ரீரெட்டி அதில் தன்னை போல் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சில நடிகைகளை பேச வைத்தார். அதில் அம்மா, அத்தை வேடத்தில் நடித்து வரும் சந்தியாநாயுடு என்ற நடிகை கூறியபோது, 'காலையில் அம்மா என்று கூப்பிடும் இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் இரவு வந்துவிட்டால் படுக்கைக்கு அழைப்பார்கள் என்றும், அதிலும் ஒரு இயக்குனர் உள்ளாடை டிரான்ஸ்பேரண்டாக இருக்கின்றதா? என்று கேட்டதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல் சுனிதா ரெட்டி என்ற மற்றொரு நடிகை கூறியபோது, 'வெளிப்புற படப்பிடிப்பின்போது பெரிய நடிகர், நடிகைகள் கேரவேனில் உடைமாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் எங்களை போல் துணை நடிகைகளை வெட்டவெளியிலே உடைமாற்ற கட்டாயப்படுத்துவார்கள் என்றும், எங்களை புழுவை விட கேவலமாக நடத்துவார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். 

More News

பிரியா வாரியரின் புதிய கண்சிமிட்டல் வீடியோ வைரல்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ப்ரியா வாரியர் நடித்த 'ஒரு ஆடார் லவ்' என்ற படத்தின் டீசர் வெளியானது.

அமெரிக்கா: மாயமான இந்தியர் மற்றும் அவரது மகள் உடல்கள் மீட்பு

இந்தியாவை சேர்ந்த சந்தீப் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 6ஆம் தேதி அமெரிக்காவில் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமாகினர்.

பூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய்ப்படத்தின் டைட்டில் அறிவிப்பு

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் முதல் சமீபத்தில் 'சவரக்கத்தி' படம் வரை நடித்த நடிகை பூர்ணா நடிக்கும் அடுத்த படம் பிரமாண்டமான பேய்ப்படமாக தயாராகி வருகிறது.

பிரபல பாடலாசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி விஜய்

தளபதி விஜய், பாடலாசிரியர் விவேக்கிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

10, 11, 12ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

இந்த ஆண்டுமுதல் 11ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.