close
Choose your channels

ஜோதிகாவின் நடிப்பை பார்த்து தான் வளர்ந்தேன்.. கனடா இளம்பெண்ணின் உணர்ச்சிமயமான பதிவு..!

Wednesday, February 12, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நான் சிறுவயதிலிருந்தே ஜோதிகாவை பார்த்து தான் வளர்ந்தேன் என இலங்கையை பூர்வீகமாக கொண்டு தற்போது கனடாவில் வாழும் இளம் பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான ‘Never Have I Ever’ என்ற தொடர் மூலம் பிரபலமானவர் மைத்ரேயி ராமகிருஷ்ணன். ஈழத் தமிழ் பெண்ணான இவர் தற்போது கனடாவில் குடியிருக்கும் நிலையில் சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந்தார்.

அவர் நடிகை ஜோதிகாவை சந்தித்த புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ‘இன்று நான் எனது ஐகான் ஜோதிகாவை சந்தித்தேன், என்னுடைய குழந்தை பருவத்தை அவர் தான் கட்டமைத்தவர். அவரை பார்த்து தான் நான் மறந்தேன். மேலும் விலங்குகள் மீது எனக்கு அன்பு ஏற்பட அவர் தான் காரணம் என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் ஜோதிகாவின் நடிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தனக்கு நடிப்பின் மீது ஆசை வர விஜய் மற்றும் ஜோதிகா தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். அவருக்கு ’போக்கிரி’ ’சந்திரமுகி’ ஆகிய இரண்டு படங்களும் மிகவும் பிடிக்கும் என்று அவர் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment