கேப்டன் மகன் விஜய பிரபாகரனின் திடீர் கெட்டப் சேஞ்ச்: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Wednesday,August 04 2021]

கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் அரசியலிலும், இளைய மகன் சினிமாவிலும் இருந்துவரும் நிலையில் மூத்த மகன் விஜய் பிரபாகரனின் திடீர் கெட்டப் சேஞ்ச் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பதும், சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் பல பகுதிகளில் தேமுதிக வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள புகைப்படம் ஒன்றில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் கெட்டப் சேஞ்ச் செய்துள்ளார். அவருடைய இந்த கெட்டப் சேஞ்ச் மற்றும் ஹேர் ஸ்டைல் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் பிரபாகரனின் ஹேர்ஸ்டைல் மாஸ் ஆக இருப்பதாகவும் அவர் தாராளமாக சினிமாவில் ஹீரோவாக நடிக்கலாம் என்றும் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது. ஒரு ஆக்சன் ஹீரோவுக்கான அப்பட்டமான முகம் என்றும் எங்கள் மண்ணின் மகன் திரையுலகில் அறிமுகமானால் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்றும் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. இதனை அடுத்து அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு விஜய் பிரபாகரன் தனது சகோதரர் சண்முகப்பண்டியன் போல் சினிமாவுக்கு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

பாத்டேப்பில் தொங்கும் கால்கள், கையில் சிகரெட்: மிஷ்கின் ஸ்டைலில் 'பிசாசு 2' ஃபர்ஸ்ட்லுக்!

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் 'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக

அரவிந்த் சாமியை கொல்ல இத்தனை பேரா? 'வணங்காமுடி' டீசர்

அரவிந்த் சாமி நடிப்பில் உருவான 'வணங்காமுடி' என்ற திரைப்படம் நீண்ட காலமாக ரிலீசாகாமல் இருக்கும் நிலையில் தற்போது இந்த படம் விரைவில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாலி ஏன் கட்டல ரசிகர் கேள்வி....! தக்க பதில் கூறிய 'குக் வித் கோமாளி' பிரபலம்....!

அண்மையில் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்த குக் வித் கோமாளி கனி, ரசிகர்களிடம் உரையாடுவது மட்டுமில்லாமல், அவர்கள்  கேட்ட கேள்விக்கு பதில் கூறினார்

தந்தை பெயரை மகனுக்கு வைத்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு தனது தந்தையின் பெயரையே வைத்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

ராஜராஜ சோழன் குறித்து பா ரஞ்சித் பேசிய வழக்கு: மதுரை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பா ரஞ்சித் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கில் இன்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது