close
Choose your channels

நாச்சியார் பட விவகாரம்: ஜோதிகா, பாலா மீது நீதிமன்றத்தில் வழக்கு

Friday, November 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் இந்த டீசரின் முடிவில் ஜோதிகா பேசும் ஒரே ஒரு வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வார்த்தைக்கு சமூக ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஜோதிகா, பாலாவுக்கு எதிராக தங்களது கண்டனங்களையும் பதிவு செய்தனர். இந்த நிலையில் ஜோதிகா மீதும், இயக்குனர் பாலா மீதும் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கால் 'நாச்சியார்' படத்திற்கு தடை ஏற்படுமா? அல்லது இலவச விளம்பரம் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.