விஜய்சேதுபதி பட விவகாரம்: 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

  • IndiaGlitz, [Tuesday,October 20 2020]

பிரபல முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படமான ‘800’ என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளிவந்து, இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியானது
இதனை அடுத்து விஜய் சேதுபதிக்கு திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்து அந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்

இந்த நிலையில் முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியின் நலனை கருத்தில் கொண்டு அவர் அந்த படத்திலிருந்து விலகிக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து ’நன்றி வணக்கம்’ என தனது டுவிட்டரில் பதிவு செய்த விஜய் சேதுபதி அந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்

இந்த நிலையில் விஜய்சேதுபதி இந்த படத்தில் நடிப்பதாக ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுக்கப்பட்டது. விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து காவல்துறை இதுகுறித்து தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. 153, 294பி, மற்றும் 67 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்
 

More News

'ஷோலே', 'ரஷ் அவர்' போல் இந்த படம் இருக்கும்: அருண் விஜய் படம் குறித்து தயாரிப்பாளர்!

அருண் விஜய் நடித்த படம் ஒன்று பாலிவுட்டில் 'ஷோலே' போலவும் ஹாலிவுட்டில் 'ரஷ் அவர்' போலவும் இருக்கும் என பிரபல தயாரிப்பாளர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சூப்பர் ஸ்டார் படம், மூன்று மொழிகள்: ஜஸ்டின் பிரபாகரனுக்கு அடித்த ஜாக்பாட்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் மூன்று மொழி பிரம்மாண்டமான திரைப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு கிடைத்துள்ளது 

ஆபாச இணையதளத்தில் 14 வயது நடிகையின் வீடியோ: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!

14 வயதாக இருக்கும்போது நடிகை ஒருவர் நடித்த எடிட் செய்யப்படாத காட்சிகளின் வீடியோ ஆபாச இணையதளத்தில் வெளியாகியுள்ளதை அடுத்து அந்த நடிகை தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கைக்கு எட்டும் தூரத்தில் தென்னையில் தேங்காய்: விவசாயத்தில் பிரபல நடிகரின் புரட்சி!

தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க வேண்டும் என்றால் அதற்கென பயிற்சி பெற்றவரை வரவழைக்க வேண்டும். ஆனால் கைக்கு எட்டும் தூரத்தில் தேங்காய் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்

கொரோனா எதிர்ப்புக்கு மவுத் வாஷ் பயன்படுமா??? விஞ்ஞானிகள் வெளியிட்ட முக்கிய தகவல்!!!

கொரோனா தடுப்பூசி பற்றிய ஆய்வுகளைத் தவிர விஞ்ஞானிகள் அதன் வீரியத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்