close
Choose your channels

விஜய்சேதுபதி பட விவகாரம்: 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Tuesday, October 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படமான ‘800’ என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளிவந்து, இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியானது
இதனை அடுத்து விஜய் சேதுபதிக்கு திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்து அந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்

இந்த நிலையில் முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியின் நலனை கருத்தில் கொண்டு அவர் அந்த படத்திலிருந்து விலகிக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து ’நன்றி வணக்கம்’ என தனது டுவிட்டரில் பதிவு செய்த விஜய் சேதுபதி அந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்

இந்த நிலையில் விஜய்சேதுபதி இந்த படத்தில் நடிப்பதாக ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுக்கப்பட்டது. விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து காவல்துறை இதுகுறித்து தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. 153, 294பி, மற்றும் 67 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.