விக்ரம் படத்தில் நடிக்க வேண்டுமா? ஒரு அரிய வாய்ப்பு

  • IndiaGlitz, [Tuesday,July 09 2019]

சீயான் விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' திரைப்படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் தற்போது 'துருவ நட்சத்திரம்' மற்றும் 'மகாவீர் கர்ணன்' ஆகிய படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் 'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கும் ஒரு அதிரடி ஆக்சன் படத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டன. முதல்கட்டமாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஒருசில புதுமுகங்களை அறிமுகம் செய்ய இயக்குனர் திட்டமிட்டுள்ளதால் இந்த படத்தில் நடிக்க விரும்பும், நடிப்பில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து வயதினர்களும் இமெயில் மூலம் அணுகலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருப்பதாகவும் இந்த படத்தை வரும் 2020ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

More News

இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி: மழை நீடித்தால் என்ன நடக்கும்?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி ஆட்டம் இன்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

காதலில் கவின், கடுப்பில் சாக்சி, கண்டுகொள்ளாத லாஸ்லியா!

பிக்பாஸ் வீட்டில் சாக்சி உள்பட நான்கு பெண்களை எளிதில் மடக்க முயன்ற கவினால், லாஸ்லியாவிடம் இன்னும் நட்புடன் கூட நெருங்க முடியவில்லை.

அவங்க எல்லாம் மனுசங்களே இல்லை: லாஸ்லியா தோழிகள் ஆவேசம்

லாஸ்லியாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், விவாகரத்தும் ஆகிவிட்டதாகவும் வதந்தி பரப்புபவர்கள் மனிதர்களே இல்லை என லாஸ்லியாவின் இலங்கை தோழிகள் ஆவேசமாக சாபமிட்டுள்ளனர்.

வனிதாவை காப்பாற்ற கொலைகாரி டாஸ்க்கா? நடத்துங்க பிக்பாஸ்!

பிக்பாஸ் வீட்டின் ரெளடி சூப்பர் ஸ்டார் வனிதா வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என ஒவ்வொரு போட்டியாளரும், ஒவ்வொரு பார்வையாளர்களும் விரும்பும் நிலையில்

வனிதா, மீராவுக்கு ஆப்பு வைத்த சக போட்டியாளர்கள்: பிக்பாஸ் மனசு வைப்பாரா?

பிக்பாஸ் வீட்டில் டாமினேட் செய்து வரும் வனிதாவும், பிரச்சனைகளை தூண்டிவிடும் மீராவும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டால் பிக்பாஸ் வீடே அமைதிப்பூங்காவாக மாறிவிடும்.